ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த #RedCardForBalaji – இதுவரை பாலாஜி செய்த தவறுகளை லிஸ்ட் போடும் நெட்டிசன்கள்.

0
2801
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த 3 சீசன்களை விட படு மோசமாக சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே கடந்த சீசனை விட இந்த சீசனில் பெரும்பாலும் சண்டைகள் மட்டும் தான் இருந்து வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே டாஸ்க் என்றால் ஜாலியாக தான் இருக்கும் ஆனால், இந்த சீஸனில் டாஸ்க்கில் கூட சண்டை தான் வருகிறது. இருப்பினும் இந்த சீசன் கொஞ்சம் சுவாரசியமான சென்றத்துக்கும் முக்கிய காரணம் ஆரி மற்றும் பாலாஜியின் சண்டைகள் தான் என்பது மறுக்க முடியாத ஒன்று.

-விளம்பரம்-

ஆனால், கடந்த சில தினங்களாக இவர்கள் இருவரும் பழசை எல்லாம் மறந்து ஏதோ அண்ணன் தம்பி போல மிகவும் பாசமாக பழகி வருகின்றனர். ஆனால், அவ்வப்போது ஆரியை பற்றி பாலாஜி மற்றவர்களிடம் புறம் பேசிக்கொண்டு தான் வருகிறார். ஆரம்பத்தில் ஆக்ரோஷ மனிதராக இருந்த பாலா, கடந்த சில வாரங்களாக அமைதியாக மாறிவிட்டார். ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் மீண்டும் பாலா தனது பழைய ஆக்ரோஷ குணத்தை ஆரியிடம் வெளிப்படுத்தினார். வாரம் முழுவதும் சுவாரஸ்யம் குறைவாக இருந்த இருவரை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் கூற, ஆரி எழுந்து பாலாஜி பெயரை சொன்னார்.

இதையும் பாருங்க : பாதிக்கப்பட்டவரை குறை சொல்வது எல்லாம் – பெண்கள் குறித்து கமல் கூறிய கருத்திற்கு சின்மயி காட்டம்.

- Advertisement -

அவர் அதற்கான காரணங்களை சொல்லும்போதே பாலாஜி இடையில் பேச, அங்கேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. பின்னர் இருவரும் சுவாரசியம் குறைவான போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இருவரும் கண்ணாடி அறைக்குள் அனுப்பப்பட்டனர். கண்ணாடி அறைக்கு சென்ற பின்னர் இடையில் வாக்குவாதம் நிகழ, ஆரி ஒரு கட்டத்தில் பாலாஜியை சோம்பேறி என்று கூற டென்சன் ஆன பாலாஜி கத்தி கூப்பாடு போட்டார். இன்னும் ஒரு முறை என்னை சோம்பேறி என்று சொன்ன அவ்ளோ தான் நீ என்று ஆரியை எச்சரித்த பாலாஜி முருகதாஸ் கண்டபடி ஆரியை திட்டித்தீர்த்து மைக்கையும் கழட்டி உடைத்து விட்டார்.

இதைப்பார்த்த பொதுவான ரசிகர்களும் கூட பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே போல இதுவரை பாலா பிக் பாஸ் வீட்டில் செய்த விதி மீறல்களை எல்லாம் சுட்டிக்காட்டி பாலாவிற்கு நிச்சயம் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். ஏற்கனவே சனம் செட்டி விவகாரத்தில் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார் என்று வதந்திகள் வெளியானது.

-விளம்பரம்-
Image

பிக் பாஸ் வீட்டில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.அப்போது சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும். யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்றுகுறிப்பிட்டு இருந்தார் . ஆனால், இந்த விவகாரம் பெரிதாக இந்த ப்ரோமோவை நீக்கி சனம் எழுதிய கடிதத்தை மெயின் எபிஸோடிலும் மறைத்தது விஜய் டிவி.

Advertisement