சேரன் பேசியதை கேட்ட பார்த்திபன்..பார்த்திபனிடம் ட்விட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்ட சேரன்..

0
47428
Cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் பங்குபெற்ற போது பிரபல இயக்குனரான பார்த்திபன் சேரன் குறித்து பேட்டி ஒன்றில் சில சர்ச்சையான விஷயங்களை கூறி இருந்தார். அந்த பேட்டியில், சேரன் ஒரு அர்பணிப்பான இயக்குனராக இருந்தாலும், மற்றவர்கள் காயப்படுவது குறித்து அவர் கவலைப்பட மாட்டார். அவருடைய பாரதிகண்ணம்மா படம் சாதிகள் ஒழிப்பை பற்றி பேசியது. ஆனால் படம் ரொம்ப சீரியஸாக இருப்பதை உண்ர்ந்தேன். அதன்பிறகு தான் நானும் வடிவேலுவும் வேறு ஒரு படத்துக்காக வைத்திருந்த காமெடி டிராக்கை பயன்படுத்தி பாரதிகண்ணம்மாவை கொஞ்சம் கலகலப்பாக மாற்றினோம். ஆனால், நான் கொடுத்த ஐடியா நன்றாக அமைந்துவிட்டது என்றால் அவருக்கு பெயர் கிடைக்காது என்று அந்த காட்சியை அவர் படத்தில் வைக்கயோசித்தார். பின்னர் எப்படியோ சமாதானம் செய்து அந்த காட்சியை அந்த படத்தில் வைத்தோம். ஆனாலும் ,சேரன் நிறைய தகராறு செய்து, ஊர் முழுவதும் எனக்கு கெட்டப் பெயரை உண்டாக்கினார்.

-விளம்பரம்-

என்னோட கதையில் பார்த்திபன் நுழைகிறார் என குற்றஞ்சாட்டினார். சேரன் குறித்து மேலும், பேசிய பார்த்திபன், அவரிடம் எனக்கே பிடிக்காத சில விஷயங்களும் இருக்கிறது. ஏதோ ஒரு குப்பையான படத்தை பார்த்துவிட்டு, என்ன இது பார்த்திபன் படம் போன்று இருக்கிறது என மேடையிலேயே பேசினார். மற்றவர்களை காயப்படுத்துவதை பற்றி அவர் கொஞ்சமும் கவலையே பட மாட்டார். அதில் தான் அவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறியிருந்தார் பார்த்திபன். இந்த நிலையில் பார்த்திபன், சேரன் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் குறித்து பேசிய அந்த குறிப்பிட்ட பேச்சினை பார்த்திபன் கேட்டுள்ளார்.

இதையும் பாருங்க : இந்திய அதிரடி கிரிக்கெட் வீரரை மணக்கப்போகும் உதயம் Nh4 பட நடிகை.. யார் தெரியுமா..

- Advertisement -

பின்னர், திரு ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் நீங்கள் பேசியதை எனக்கு காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது. ஏதோ ஒரு தூண்டலில் அது வெளிபட்டது என்று சேரனிடம் ட்விட்டரில் கேட்டுள்ளார் பார்த்திபன். அதற்கு பதில் அளித்த சேரன், அந்த திரைப்படம் உங்கள் பாணியில் இருப்பதாக குறிப்பிட நினைத்தேனே தவிர குப்பைப்படம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்க மாட்டேன்.. தவறி வந்திருந்தால் மன்னிக்கவும். புதியபாதை, ஹவுஸ்புல், க.தி.வ.டை, குடைக்குள் மழை, ஒத்த செருப்பு எல்லாம்பார்த்து என்னைமறந்து பேசியிருக்கிறேன்.. உங்களிடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்றுமொரு பதிவில், ஏதோ ஒரு தவறான புரிதலில் சொல்லியிருக்கிறார்.. அவர் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்.. எந்தப்படத்தை பார்த்து அப்படிச்சொன்னேன் என தெரியவில்லை.. சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.. சற்று டபுள்மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லியிருப்பேன். நீங்கள் திரைத்துறையில் அறிமுகமாகி சரியாக 30 வருடங்கள்.. இன்னும் முதல் படம் போலவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும் கலைஞன்.. பெருமிதம் கொள்கிறேன் உங்களோடு என் முதல் பயணம் துவங்கியதில்லை

-விளம்பரம்-

சேரன் குறிப்பிட்டது போலவே, ரசிகர் ஒருவர் சேரனுக்கு ஆதரவாக அந்த விடியோவை பகிர்ந்து நீங்கள் கூறியது சரி தான். நான் இப்பொழுது 6 வருடம் பின்னோக்கி அந்த படத்தின் ஆடியோ விழாவில் உங்கள் பேச்சை தேடி கேட்டேன். அவர் குத்து பாட்டு ஆடும் பாணியை தான் சொன்னீர்களே தவிர வேரேதும் தவறி கூட சொல்லவில்லை பார்த்திபன் அவர்கள் வருந்த வேண்டாம் சான்றுக்கு 13.22 என்று பதிவிட்டுள்ளார். அதில் சேரன் என்ன கூறியுள்ளார் என்று நீங்களே பாருங்கள்.

Advertisement