வீட்டிற்கே வந்து சந்தித்த முதல் போட்டியாளர். விருந்து வைத்த மதுமிதா. வைரலாகும் புகைப்படங்கள்.

0
115036
madhu
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில்கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதில் மிகவும் சர்ச்சையான விஷயமாக பார்க்கப்பட்டது மதுமிதாவின் திடீர் வெளியேற்றம் தான். மேலும்ம் ஒரு எபிசோடில் மதுமிதா காவேரி குறித்து பேசியதால் அவரை ஷெரின் வார்த்தைகளால் புண்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேறிய போது சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அப்போது வீட்டில் இருந்த 8 பேர் மீதும் மதுமிதா வழக்கு தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. மேலும், இறுதிப் போட்டிக்கு மதுமிதாவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை இருப்பினும் மதுமிதா கணவர் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு வந்தது போல விஜய் தொலைகாட்சி போலியான ஒரு வீடியோவை இணைத்து ஒளிபரப்பியது. இதனால் விஜய் டிவியை கேள்வி கேட்டு மதுமிதாவின் கணவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுமிதா விஷயத்தில் ரசிகர்கள் பலரும் விஜய் டீவிக்கு எதிராகத்தான் இருந்து வருகிறார்கள். இத்தனை விஷயங்கள் நடந்தும் மதுமிதா குறித்து யாருமே இன்னமும் வாய் திறக்காதது ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதையும் பாருங்க : நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகர் சார்லிக்கு கிடைத்த பட்டம். குவியும் பாராட்டு.

அவ்வளவு ஏன் மதுமிதாவுக்கு ஆதரவாக இருந்த சேரன் கூட மதுமிதா குறித்து எந்த ஒரு பதிவையும் போடவில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேரன், ஷெரின் மற்றும் சாக்க்ஷியை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்தையும் அளித்தார். மேலும், அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார் சேரன். சேரனின் இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர் மிக்க மகிழ்ச்சி, மதுவுடன் தாங்கள் இந்த தருணங்களை பகிர்ந்திருந்தால் இன்னும் வெகு சிறப்பாக இருந்திருக்கும்! மதுவிற்கு தான் தேவைப்படுகிறது வலியை உடைக்கும் தாழ்-அன்பு அரவணைப்பு! விரைவில் எதிர்நோக்குகிறோம்! என்று பதிவிட்டிருந்தார். அதே போல பலரும் மதுமிதாவை சந்தித்த அவரது நிலை குறித்து பதிவிடுங்கள், அவருக்கு ஏற்பட்ட அநீதி விரைவில் வெளிவர வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்றும் கமன்ட் செய்து வந்தனர்.

ரசிகர்களின் கமன்ட்களுக்கு செவி சாய்த்த சேரன், வணக்கம், நான் மதுமிதாவிடம் பேசி கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று பதில் அளித்திருந்தார். அதனை உறுதி செய்யும் விதமாக மதுமிதாவின் கணவர் மோசஸ், நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விரைவில் மதுமிதாவை, சேரன் சந்திப்பார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில் சொன்னதை போலவே சேரன் மதுமிதாவை சந்தித்துள்ளார். சமீபத்தில் மதுமிதாவை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார் சேரன். மேலும், சேரனுக்கு, மதுமிதா விருந்தும் வைத்து அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் முன்பு சொன்னதை போலவே மதுமிதாவை நேரில் சந்தித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் சேரன்.

-விளம்பரம்-
Advertisement