‘இது தான் Decentஆ, நீ பக்கத்துல வந்துட்டா பயந்துருவாங்களா’ – அசலை அலறவிட்ட தனலட்சுமி – முழு சண்டை இதோ.

0
470
dhanam
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வெளியான இன்றைய ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு மத்தியில் கலவரம் தொடங்கியிருக்கிறது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில் முதல் வாரத்திலேயே முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் வாரம் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்து இருக்கிறது. அதில் ஜி பி முத்து இந்த வார தலைவர் ஆகியிருக்கிறார். மேலும், இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். இதற்கு கதை சொல்லும் நேரம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த போட்டியாளர் இறுதிவரை கதையை சொல்லி முடிக்கிறாரோ அவர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்:

இதனால் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இரண்டு பேராக சேர்ந்து போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுத்த கெட்டப்பில் நடனமாடி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் வெடித்து இருக்கிறது. அதாவது, இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி விட்டது.

-விளம்பரம்-

அசல்-தனலட்சுமி சண்டை:

அந்த வகையில், அசல், தனலட்சுமியை வம்பிழுத்து கொண்டே வந்திருக்கிறார். இதனால் கடுப்படான தனலட்சுமி, நானும் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னை மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறாய். என்னை பார்த்து பெரியம்மா, ஆன்டி என்று சொல்கிறாய். நான் எப்படி இருந்தால் உனக்கு என்ன? நீ எனக்கு சோறு போட்டு வளர்க்கிறியா? என்று அவரிடம் சண்டை போட்டு இருக்கிறார். இதனை பார்த்த பிற போட்டியாளர்களும் இவர்களுடைய சண்டையை தடுக்க நினைத்து இருக்கிறார்கள்.

அடித்து கொள்ளும் பிற போட்டியாளர்கள்:

உடனே தனலட்சுமி, நான் என்ன செய்தேன்? என்னை ஏன் கேட்கிறீர்கள்? செய்வதெல்லாம் அவன் தான். அவனிடம் பேசுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இவர்களுடைய சண்டை அப்படியே பெரிதாகி வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களான விக்கிரமன், அசிம், ஜி பி முத்து என்று பலருமே சண்டை போட ஆரம்பித்திருக்கிறார்கள். விட்டால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டு இருக்கிறார்கள்.

Advertisement