சமீபத்தில் நடிகை ஜனனி ஐயரின், தாய் மற்றும் தங்கை கிருத்திகா ஆகியோரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது ஜனனி ஐயர் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டனர். மஹத் மற்றும் ஜனனி 8 வருடங்களாக நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார் கிருத்திகா.
மேலும், ஜனனிக்கு சமையல் சுத்தமாக தெரியாது என்றும், அவள் இந்த நிகழ்ச்சிக்கு சென்ற போதே சற்று பயத்துடன் சென்றார் என்றும் கிருத்திகா கூறியுள்ளார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் எங்களுடைய தாய் மாமா இறந்துவிட்டார், அது அவளுக்கு தெரியாது. ஒருவேளை அது தெரிந்தால் கண்டிப்பாக வந்துவிடுவார் என்று கிருத்திகா தெரிவித்துள்ளார்.
ஜனனனி அவர்களின் மாமா இறந்த விடயம் தெரியாமலேயே அவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அதே போல இந்த வார ஏவிக்ஷனில் ஜனனியும் இருந்து வருகிறார். ஒருவேளை அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் சோகத்தோடு வீட்டிலும் ஒரு வருத்தனமான செய்தியும் ஜனனிக்கு காத்திருக்கிறது.




