மீண்டும் தனது ஜாதிப்பெயரை குறிப்பிட்டு வெளியான செய்தி – ஜனனி ஐயர் ரியாக்ஷன்.

0
1458
janani
- Advertisement -

பொதுவாக நடிகைகள் சிலர் தங்கள் பெயருக்கு பின்னால் தங்கள் ஜாதி பெயரை வைத்துக்கொள்வது வாடிக்கையான ஒன்றாக தான் இருந்து வருகிறது. தமிழ் நடிகைகளை விட கேரள நடிகைகள் தான் தங்கள் பெயருக்கு பின்னால் தங்களது ஜாதியின் பெயரை போட்டுக்கொள்வார்கள். லட்சுமி மேனன், ரகுல் ப்ரீத் சிங், பார்வதி மேனன், நித்யா மேனன், பார்வதி நாயர், ஐஸ்வர்யா மேனன் என்று பலர் இந்த லிஸ்டில் அடங்கும். சமீபத்தில் நடிகை ஜனனி ஐயர் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்ற தனது ஜாதிப் பெயரை நீக்கியது பலரின் பாராட்டை பெற்றது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜனனி ஐயர். இவர் விஷால், ஆர்யா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அவன் இவன் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதன் முதலாக மாடலிங் தான் செய்தார். அதற்குப் பின்பு இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பிறகு தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

2010 ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற படத்தின் மூலம் தான் ஜனனி ஐயர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.இதற்கு பிறகு தான் இவர் 2011 ஆம் ஆண்டு அவன் இவன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஜனனி ஐயர், தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற தனது சமூக பெயரை நீக்கியுள்ளார். இதுகுறித்து பதிவிட்ட அவர், மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் ஒற்றுமையுடன் ஜனனி என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்றில் மீண்டும் இவர் பெயரை ஜனனி ஐயர் என்று குறிப்பிட அதனை சுட்டிக்காட்டி ‘ஜனனி’ என்று மீண்டும் தனது ஜாதி அடையாளத்தை விரும்பவில்லை என்பதை நிரூபித்துள்ளார் ஜனனி.

-விளம்பரம்-

Advertisement