எந்த மெரினா பீச்ல நான் போராட்னனோ, அதே மெரினா பீச்ல என் மூஞ்சில காரி துப்புனாங்க – கண்ணீர் விட்ட ஜூலி. வீடியோ இதோ.

0
3739
julie
- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

இதையும் பாருங்க : அக்காவை மிஞ்சிய தங்கை. படு கிளாமர் உடையில் அக்ஷரா ஹாசன் நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை.தற்போது ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சென்ராயன் நடனமாடி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சிக்கு பின் ஜூலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, என்னதான் அழகான போட்டோ போட்டாலும், நல்ல கேப்ஷன் கொடுத்தாலும் ‘நீங்கள்’ என்பதால் ஒரு சிலர் லைக் போட மாட்டார்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-15-602x1024.jpg

இதை பார்த்த பலரும் ஆமாம், என்று கேலியாக கமன்ட் செய்து வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜூலி, உருக்கமாக பேசியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டுக்காக மெரினா பீச்சில் நான் இருந்தபோது நிறைய பேர் எனக்கு தண்ணி கொடுத்தாங்க ஆனால் பிக் பாஸுக்கு சென்று வந்ததற்கு பிறகு அதே மெரினா நிகழ்ச்சியில் என் மூஞ்சில காரி துப்புனாங்க. அந்த அளவிற்கு நான் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார் ஜூலி.

-விளம்பரம்-
Advertisement