முதன் முறையாக தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசிய சாண்டியின் முன்னாள் மனைவி காஜல்.

0
8564
kajal
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். சாண்டியின் பிரிவு குறித்து பேசுகையில் ‘நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம். சாண்டியின் மீது அதிகப்படியான பாசத்தினால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம். ஆனால், தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக நீச்சல் உடையில் தமன்னா. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.

- Advertisement -

காஜலை விட்டு பிரிந்த சாண்டி இரண்டாம் திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.எப்போதும் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அடிக்கடி ஏதாவது பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் குழந்தை இருப்பவர்களுக்கும், கணவர் இருப்பவர்களுக்கும் சூப்பர் மாம், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சியை நடத்துவது போன்று என்னைப்போல விவாகரத்து ஆன நபர்களுக்கு ‘முரட்டு சிங்கிள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தலாமே என்று ஜீ தமிழ் தொலைக்காட்சி குறிப்பிட்டிருந்தார்.

காஜலின் இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர்தலைப்பு நல்லாதான் இருகின்றது காஜல் டார்லிங். ஆனால் உங்களுக்கு வயசு ஆகிடுச்சா இல்லையே, மிகவும் வடிவாக இருக்கின்றீர்கள். நீங்களும் திருமணம் முடிக்கணும் வாழ்க்கையில் எப்பவும் மகிழ்ச்சியுடன் வாழவேணும். எனக்கு தங்கள் நினைவு வரும்போதெல்லாம் இதை நினைப்பேன் என்று பதிவிட்டிருந்தார். ரசிகரின் பதிவிற்கு பதிலளித்த காஜல் உங்கள் கரிசனத்திற்கு மிக்க நன்றி. எனக்கு நம்பிக்கை குறைபாடு இருக்கிறது. நான் இப்போது தனியாக வாழ்வது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது எனக்கு வேலை தான் முக்கியம். எனக்கு நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். நான் தொடர்ந்து பிசியாக இருந்து நன்றாக சம்பாதித்து என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொண்டால் அதுவே எனக்கு சந்தோஷம். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார் காஜல் பசுபதி.

-விளம்பரம்-

இது ஒருபுறமிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஜல் குழந்தை ஒன்றை தத்து எடுக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். மேலும், இதற்காக பல குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து வரும் பிரபல நடிகரும் நடன இயக்குநருமான லாரன்ஸ்ஸின் உதவியை கேட்டிருந்தார். மேலும், இந்த பதிவை கண்டு சாண்டியும் அவரது மனைவியும் காஜலை தொடர்பு கொண்டு குழந்தை தத்தெடுப்பிற்கு தாங்கள் உதவி செய்வதாக கூறி இருந்தார்கள் என்று காஜல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement