சொருகிடுவேனுக்கு 1 நிமிட கண்டனம், தொளலத்துக்கு 4 நிமிட கண்டனமா? கமலின் பாரபட்சத்தால் கடுப்பாகும் நெட்டிசன்கள்.

0
481
Nixen
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் என்றாலே வாரம் ஒரு பஞ்சாயத்து வரும். அந்த வகையில் இந்த வாரம் நிக்சன் – அர்ச்சனா விஷயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா மற்றும் நிக்ஸன் ஆகிய இருவருக்கும் சில வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. அப்போது நிக்சன் ‘ ஒருவரை துள்ரவன், பலியாடு என்றெல்லாம் முத்திரை குத்துவது நீங்கள் தான். நீங்கள் மற்றவர்களை மிகவும் கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். முதல் வாரத்தில் அழுது இப்போ வரை அதை செய்கிறீர்கள் என்று நிக்சன் கூறியதும் கடுப்பான அர்ச்சனா ‘ நான் முதல் வாரத்தில் செய்ததை பற்றி எல்லாம் பேசுனா நான் நிறைய விஷயம் பேச வேண்டியது இருக்கும்’ என்று பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அப்போது அர்ச்சனாவை கறி துப்பி, வாடி போடி, நாயே என்றெல்லாம் பேசினார் நிக்சன். மேலும், ‘ நான் கலாய்க்க ஆரம்பித்தால் 3 நாள் அலுவ, மூஞ்ச பாரு கருமம், சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன அவ்ளோ தான். நான் யாரிடமும் பேசினால் உனக்கு என்னடி ‘இனி வினுஷாவ பற்றி யாராவது பேசினால் சொருகிடுவேன் என்று கத்தினார். இதனால் கடுப்பான விஷ்ணு எங்கே சொருகு பார்க்கலாம் என்று நிக்ஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் ‘நான் உங்களை சொல்லவில்லை என்று அப்படியே அடங்கிப் போனார் நிக்சன். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே வார இறுதியில் கமல் பேசும் விஷயத்தை பார்க்கவே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், இந்த சீசனில் கமல், மக்கள் எதிர்பார்த்த எந்த ஒரு விஷயத்தையும் வார இறுதியில் செய்யவில்லை. அந்த வகையில் இந்த வாரம் நிக்சன் விஷயத்திலும் கமலின் செயல் ரசிகர்களை பெருத்து ஏமாற்றத்தில் தள்ளி இருக்கிறது.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனாவை இப்படி கேவலமாக பேசிய நிக்சனை வறுத்தெடுத்ததை விட தினேஷ், அர்ச்சனா, மணி ஆகியோரை தான் கமல் வறுத்தெடுத்தார். அதிலும் குறிப்பாக நிக்சனுக்கு ஏதோ கடமைக்கு Yellow Card காண்பித்துவிட்டு இனி அப்படி பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டார். ஆனால், ஆட்டிகிட்டு, தொளலத் போன்ற வார்த்தைகளை பேசிய தினேஷை கடுமையாக விமர்சித்தார் கமல். அதிலும் நார்த் மெட்ராஸில் இப்படி தான் பேசுவார்கள் என்று சொல்ல நீங்கள் யாரு என்றெல்லாம் கேட்டு இருந்தார்.

கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியல் ஆதாரத்திற்காக பல முறை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் மணி, நிக்சன் பற்றி ‘அவரது True Colour’ வெளியில் வருகிறது என்ற சொன்னதை குறிப்பிட்ட கமல், true colour என்றால் என்ன அவர் எந்த ஏரியா என்பது முக்கியமல்ல, ஒரு ஏரியாவை பொறுத்து ஒருவரை Brand செய்யாதீர்கள். இனி அப்படி பேசாதீங்க நிக்சன், இல்லை என்றால் உங்களை இப்படி தான் Brand செய்வார்கள் என்று நிக்ஸ்னுக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

மொத்தத்தில் கமலின் நேற்றைய பேச்சு ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியது. குறிப்பாக வினுஷா, குறித்து நிக்சன் பேசியதை பற்றி இனி யாரும் பேசக்கூடாது. ஏனென்றால் அதை பற்றி பேச வினுஷா உள்ளே இல்லை என்று மிகவும் அப்பதமான ஒரு கருத்தை தெரிவித்தார். அப்போது எதற்காக வினுஷா பற்றி நிக்சன் பேசிய விஷயத்தை பற்றி ஒரு டாஸ்கில் திரையில் போட்டு காண்பித்தார்கள் என்பது புரியாத ஒரு கேள்வி.

Advertisement