விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சொல்லப்போனால் இந்த சீசனுக்கு முன்னாள் ஒளிபரப்பான இரண்டு சீசன்களை விட இந்த சீசன் தான் மிகவும் ஹிட் அடைந்தது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் அந்த வகையில் கவினும் ஒருவர். கவின் அவர்கள் படிக்கும் போதே ஆர்.ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் ‘வேட்டையன்’ என்கிற சரவண பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் பாருங்க : இவர் நடிகரா இல்லை ஜோசியக்காரரா? சொன்னதெல்லாம் அப்படியே நடக்குதே? வியக்கும் ரசிகர்கள்.
இவருக்கென்று தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டனர். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கவின், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் புகைப்பங்களை பதிவிட்டாலே அதற்க்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் விழுந்து விடும்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கவின் தனது கல்லூரி பருவ புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். கவினின் இந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர் ரேஷ்மா ‘யார் இந்த குழந்தை’ என்று பதிவிட்டுள்ளார்.