மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கவின்.! லாஸ்லியாவின் ரியாக்ஷன மட்டும் பாருங்க.!

0
23123
kavin
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றுடன் 103 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.

-விளம்பரம்-

முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் ரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே போல இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர் .

- Advertisement -

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக சாக்க்ஷி மற்றும் கஸ்தூரி கூட பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தற்போது கவின் மற்றும் தர்ஷன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்றவுடன் வனிதா, ஷெரினிடம் தர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம் என்று கூறி ஷெரீனை அழ வைத்துள்ளார் . மேலும், உன்னை பற்றையும் தர்ஷனை பற்றியும் நான் சொன்ன விஷயத்தை மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின்னர் ஏற்று கொண்டு விட்டனர் என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பான சாக்க்ஷி, வணிதாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

-விளம்பரம்-

இன்னும் 3 நாட்களில் இந்த சீசன் வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும். இந்த சீசனில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்கான வாக்குப்பதிவு இந்தவாரம் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இதேபோல லாஸ்லியாவிற்கும் முகெனுக்கு இணையான ஆதரவு இருந்து வருகிறது. முகெனுக்கு எப்படி தர்ஷன் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றன. அதேபோல கவின் ரசிகர்கள் பலரும் தற்போதுலாஸ்லியாவிற்கு ஆதரவை அளித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக லாஸ்லியா முதல் மூன்று இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து விடுவார் என்று நம்பப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement