பிக் பாஸிற்கு பின் இலங்கையில் முதல் பேட்டியில் பங்கேற்ற லாஸ்லியா.. என்ன கூறியுள்ளார் பாருங்க..

0
30952
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிறைவடைந்து மூன்று வாரங்கள் ஆனாலும் இன்னமும் பிக்பாஸ் குறித்த பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் நிலவி கொண்டுதான் வருகிறது. கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டார்கள் அதில் மிகவும் முக்கியமான நபர் என்றால் அது இலங்கையை சேர்ந்த ஈழத்துப் பெண் லாஸ்லியா தான்.

-விளம்பரம்-
Image
விமான நிலையத்தில் லாஸ்லியா :

இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்யாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஈழத்து பெண் என்ற அடையாளத்தால் இவருக்கு ஆரம்பத்திலேயே தமிழ் ரசிகர்களின் அன்பு கிடைத்துவிட்டது. அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இவர் பல்வேறு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார் இதனால் இவருக்கு என்று பலஆர்மிக்கள் கூட உருவானது போதாத குறைக்கு இவர் கவினிடம் காதலில் விழுந்ததால் கவினின் ரசிகர்களும் அவருக்கு மிகுந்த ஆதரவாக இருந்து வந்தார்கள்.

இதையும் பாருங்க : நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக்காக்கிய யாரடி நீ மோகினி சைத்ரா..

- Advertisement -

ஆரம்பத்தில் லாஸ்லியா ஒரு சில வாரங்களில் மட்டும் நிலைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களின் பேராதரவு இறுதிப்போட்டி வரை வந்தார் லாஸ்லியா இதற்கு முக்கிய காரணமே கவின் என்று சொன்னால் அது மிகையாகாது லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை கவின் தான் லாஸ்லியாவிற்கு மிகவும் ஆதரவாக இருந்து வந்தார். இதே போல இவர்கள் இருவரின் காதல் விஷயத்தில் பல்வேறு பிரச்சினைகளும் வெடித்திருந்தது. ஒரு கட்டத்தில் லாஸ்லியாவின் பெற்றோர்களிடம் நெருங்கிப் பழகியதற்காக லாஸ்லியாவை மிகவும் கண்டித்தார்கள். இருப்பினும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

Image
ரசிகருடன் லாஸ்லியா
Image
ரசிகரின் அன்பு மழையில் லாஸ்லியா

சொல்லப்போனால் லாஸ்லியா ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கவின் 5 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை தான் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியா எந்த ஒரு பேட்டியிலும் பங்குபெறவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு லாஸ்லியா, தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் லாஸ்லியாவை பல்வேறு ரசிகர்களும் வரவேற்றனர்.

-விளம்பரம்-

மேலும், விமான நிலையத்தில் லாஸ்லியா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில், , பிக்பாஸ் நிகழ்ச்சி என்னைப் போன்ற சாதாரண பெண்ணுக்கும் புகழ் வெளிச்சத்தைத் தந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக என்னை பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூலமாக பெரும் புகழை அடைந்திருக்கிறேன். அதற்காக ரசிகர்களுக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Image
தோழிகளுடன் லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் ஒன்றாக சந்தித்து தங்களது காதல் குறித்து ஏதாவது பேசுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தார்கள் ஆனால் இதுவரை கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அதேபோல இருவருமே எந்த ஒரு தனிப்பட்ட பேட்டியிலும் பங்கு பெறவில்லை மேலும் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது கூட கவினிடம் லாஸ்லியா அந்த அளவிற்கு நெருக்கமாக பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், பிக் பாஸ் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இலங்கையை திரும்பியுள்ள லாஸ்லியா தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை லாஸ்லியாவின் தோழிகள் தங்களது சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருந்தனர். அந்த பதிவில் சிங்கிள் லைஃப் என்று பதிவிட்டு இருந்ததால் லாஸ்லியா இன்னும் சிங்கிள் தான் என்பது உறுதியானது. எனவே கவின் மற்றும் லாஸ்லியா இருவரில் கதை இத்துடன் முடிந்தது என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

Advertisement