கவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள்..

0
20189
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியின் ட்ரேட் மார்க் பொழுது போக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற இரண்டு சீசன்களை விட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வேற லெவல் கூட சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு இந்த சீசனில் காதல் காவியம் நிறைந்து இருந்தது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் 2 – ல் இருந்த போட்டியாளர்கள் எல்லாரும் காதலிச்சாங்க, சண்டை போட்டாங்க ஆனா, வெளிய போனவுடன் அதைப் பற்றி எந்த ஒரு தகவலும் வரவில்லை. அதே போல ரசிகர்களும் பிக் பாஸ் முடிந்தவுடன் அதை பற்றி பேசமாட்டாங்க. ஆனால், இந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா,கவின் காதல் பற்றிப் பேசாதவர்கள் யாருமேஇல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

இந்த சீசன் ஆரம்பத்தில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் நண்பர்களாக தான் பழகி வந்தார்கள். மேலும் லாஸ்லியா,கவின் நட்பு சில நாட்களில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதனாலேயே சேரன், சாண்டி என பல பேர் முதலில் இவர்களின் காதலை எதீர்த்தார்கள். ஆனால், இவர்களது அழகான காதல் கதை ரசிகர்களிடையே அதிக அளவு வரவேற்கப்பட்டது. மேலும், பிக்பாஸில் நடந்த ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவின் குடும்பத்தினர்கள் வந்து இருந்தார்கள். அதில் லாஸ்லியா அப்பா நீ இதுக்கு தான் வந்தயா? என்ன சொல்லி வந்த, உன் வேலையை பாருன்னா அதை விட்டு வேற என்னவோ பண்ணிட்டு இருக்க என்று சராமாரியாக வெளுத்து வாங்கினார்.

இதையும் பாருங்க : பிகில் படத்தில் நடிப்பதாக இருந்த 96 நடிகை.. ஆனால், இந்த காரணத்தால் தவறவிட்டுட்டாராம்..

- Advertisement -

ஆனாலும், லாஸ்லியா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவர்கள் இருவரும் மீண்டும் தங்களின் காதல் பயணத்தை செய்ய ஆரம்பித்தார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லாஸ்லியா, என் பெற்றோர் சம்மதத்துடன் தான் நான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். மேலும்,என் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து என்னிடம் பேசியது வெளியில பெருசா போய் இருக்கும். ஆனால், அவங்க என்ன திட்டினாலும், பேசினாலும், அடித்தாலும் அவங்க என் குடும்பத்தார்.எங்களுக்குள்ள எந்த ஒரு உறவு விரிசலும் ஏற்படாது. ஏன்னா அவங்க என் நன்மைக்காக தான் பேசினார்கள் என கூறினார் . அவரது சமூகம் எங்களை எப்படி நடத்தியது? என அவருக்கு தெரியல. எங்க அப்பா எல்லோரிடம் ரொம்ப பாசமாக இருப்பவர். என்னுடைய அப்பா, அம்மாவும் காதலித்து தான் திருமணம் செய்தார்கள். சமீபத்தில் நடந்த பேட்டியில் லாஸ்லியா எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்துகொள்வோன் என்று கூறியிருந்தார்.

Image

எனவே, கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் இன்னமும் காதலித்து தான் வருகிறார்கள் என்று கவிலியா ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பி வந்தார்கள். எனவே, கவினிடத்தில் லாஸ்லியா பற்றியும், லாஸ்லியாவிடம் கவின் பற்றியும் தொடர்ந்து விசாரித்து வந்தார்கள். இந்த நிலையில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை உண்மையா பொய்யா என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் லாஸ்லியாவின் தோழிகள். சமீபத்தில் லாஸ்லியாவின் தோழிகளான தர்ஷி மற்றும் ஐஷு ஆகியோருடன் லாஸ்லியா இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டினர். மேலும், அந்த பதிவிற்கு கீழ் லாஸ்லியா கவின் காதல் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இருவரும் கவின் மற்றும் லாஸ்லியா இருவர் மத்தியில் எந்த ஒரு காதலும் இல்லை என்றும், அவர்கள் கேம்காக தான் இப்படி செய்தார்கள் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றனர். மேலும், லாஸ்லியாவின் தோழி பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தின் கீழ் SINGLELife என்று பதிவிட்டுள்ளார். எனவே, தாங்கள் மூவரும் சிங்கள் தான் என்பதை உணர்த்தியுள்ளனர்.

-விளம்பரம்-

இப்படி கவின் மற்றும் லாஸ்லியா குறித்து பல்வேறு தகவல்கள் வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இதுவரை இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திக்கவும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பிக் பாஸ் கொண்டாட்டத்தில் தான் லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் ஒன்றாக சந்தித்தார்கள். ஆனால், அப்போதும் கவின் லாஸ்லியா இருவரும் அந்த அளவிற்கு முகம் கொடுத்து பேசவும் இலக்கு. மேலும், லாஸ்லியாவும் தற்போது இலங்கைக்கு சென்று விட்டார். எனவே, கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் இருவரும் மனம் திறைந்தாள் தான் இதற்கு ஒரு முடிவு வரும்.

Advertisement