விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.
இவர் பிக் பாஸில் இருந்த போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா. இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு கனடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இறந்து இருந்தார். இதனால் லாஸ்லியவிற்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர். மேலும், லாஸ்லியா தந்தையின் மரணம் தற்கொலை என்று கூட வதந்திகள் பரவியது. ஆனால், அவர் இயற்கை மரணம் தான் அடைந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்து இருந்தர்கள்.
இதையும் பாருங்க : மிஷ்கினின் இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ள நதியா. பின்ன இவங்கள இப்படி நடிக்க சொன்னா (கடைசில நடிச்சது இந்த நடிகை தான்)
ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாகவும், லாஸ்லியாவின் தந்தை வெளிநாட்டில் இறந்த காரணத்தாலும் அவரது உடல் லாஸ்லியாவின் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வர தாமதமானது. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மரியாநேசனின் உடல் இலங்கைக்கு கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி இருந்தனர். தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா.
தந்தையின் இறப்பிற்கு பின்னர் சமூக வலைதளத்தில் கூட சற்று ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார் லாஸ்லியா. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சில போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இதற்கு ரசிகர் ஒருவர், அவன் அவன் கொரோனால செத்துட்டு இருக்கான். உனக்கு போட்டோ ஷூட் கேக்குதா என்று கமன்ட் செய்தார். இதற்கு லாஸ்லியாயோ, தயவு செஞ்சி நீங்க இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதீங்க. அப்போதா என்னுடைய போஸ்ட்ட நீங்க பாக்காம இருக்க முடியும் என்று பதில் அளித்துள்ளார்.