பவானி அபிநய்ய சந்தேகப்படுறீங்க சரி, அப்போ இவங்க ரெண்டு பேரு கூட கல்யாணம் பண்ணிக்க போறாங்களா – கடுப்பான மதுமிதா.

0
748
pavni
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் . அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

-விளம்பரம்-

பவானி மற்றும் அபிநய் இருவரும் தங்களுக்குள் எதுவும் இல்ல என்று சொன்னாலும் இவர்களை முடிச்சி போட்டு இன்னும் பேசிக்கொண்டு தான் வருகின்றனர். நேற்று நடைபெற்ற டாக்கில் கூட சிபி, அநபிய்க்கும் பாவனிகும் இருப்பது நட்பும் இல்லை காதலும் இல்லை. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் உறவு பற்றி யாருக்கும் புரியவில்லை என்று கேள்வி கேட்டிருந்தா.ர் இதற்கு ஒரு சிலர் ஆம் என்றும் ஒரு சிலர் இல்லை என்றும் கூறி இருந்தார்கள். இந்த டாஸ்க் முடிந்த பின்னர் இதுகுறித்து சிபியிடம் விளக்கம் கேட்டு இருந்தார் பாவணி.

இதையும் பாருங்க : சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு நாள். – விசாரிக்கப்படாத மொபைல் கால்,விலகாத மர்மம் .

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் பவானி யாரிடம் பேசினாலும் அதை முடிச்சுப்போட்டு போட்டியாளர்கள் பேசுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. ஆனாலும், பவானி அமீரிடம் பேசுவது அபிநயிக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் உறுதியாக சொல்ல முடியும். அதனை பலமுறை நாம் கண்டு இருக்கலாம். இருந்தாலும் ஒரு ஆணும் பெண்ணும் பேசினாலே இப்படி முடிச்சுப் போட்டு பேசுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. அதேபோல பவானி ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவர். அபினை திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை இப்படியிருக்கையில் இவர்களைப் பற்றி அடிக்கடி பிக்பாஸ் வீட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருவது இவர்களின் இருவரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை போட்டியாளர்கள் ஏன் உணரவில்லை.

அதேபோல அக்ஷரா மற்றும் வருண் உறவு பற்றி யாரும் ஏன் கேள்வி கேட்பது இல்லை என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாக இருந்த மூன்றாவது ப்ரோமோவில் பவானி தன்னை அபிநய்யுடன் ஒப்பிட்டுப் பேசுவது குறித்து ராஜுவிடம் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார். அதேபோல நேற்றைய டாஸ்க்கின் போது சிபி அப்படி கேட்டது குறித்தும் பவானி கேட்டுக் கொண்டிருக்கும் போது சிபியும் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது, நான் அப்படிதான் பேசுவேன் என்றும் கூறுகிறார்.

-விளம்பரம்-
அடிச்சி மூஞ்ச பேத்துருவேன் - Madhumitha | Bigg Boss 5 Unseen Day 23 | Pavani,  Suruti | Vijay TV - YouTube

இந்த வீடியோவை கண்ட பலரும் பாவனைக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய மதுமிதா இந்த ப்ரோமோவை பார்த்து கமெண்ட் செய்திருப்பது ‘பவானி, அபிநய்யிடம் தான் மணிக்கணக்காக வீட்டில் பேசுகிறார். அதனால் அவர்களின் உறவை நீங்கள் சந்தேகப்படுகிறார்கள் சரியா ? எனக்கும் ஒரு சந்தேகம். அண்ணாச்சி மற்றும் ராஜா இருவரும் தான் அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா ? என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement