திருமணமாகி குழந்தை இருப்பவரை திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சனை – பிக் பாஸ் மமதி தற்போதைய நிலை இதான்.

0
765
mamithi
- Advertisement -

பிரபல பிக்.எப்.எம் ரேடியோ நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்தவர் மமதி சாரி. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஹலோ தமிழகம் ” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்தார். மக்களின் அபிமானத்தை பெறாத மமதி சில வாரங்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றபட்டார். சமீபத்தில் அவர் எழுதிய புத்தகத்தை வெளிவருவதயும் அதற்கான விதை எப்படி வந்தது , தனது சொந்த வாழ்வில் நடந்த சில பிரச்சனைகள் குறித்தும் மனந்திறந்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

கனவருடன் விவாகரத்து :-

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்துள்ளார். மமதி சாரி ஏற்கனவே திருமணமான ஒரு நபரை தான் திருமணம் செய்துகொண்டுள்ளாராம். வெளி மாநிலத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் பெற்றவராம் , அவரது முன்னாள் மனைவி மமதி சாரியின் தோழி தானம். அவரது அனுமதி பெற்ற பின்னரே மமதி அந்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய மமதி “எங்கள் உறவு அன்பால் நிறைந்து இருந்தது. ஆறு ஆண்டுகள் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தோம். பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டு ஒரு ஆறு ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்தோம். அதன் பின்னர் 2014 ஆண்டு எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது.

- Advertisement -

மன ஆழுத்ததிற்கு உள்ளானேன் :-

மேலும் அவர் கூறியது எனது முன்னால் கணவரை இன்றைய வரையிலும் காதலிக்கிறேன் நேசிக்கிறேன் ஆனாலும் அப்பதையே சூழ்நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். திருமணமான பிறகு மீடியாவில் இருக்கும் அனைத்து பெண்களும் சந்திக்கும் அதே பிரச்சனை தான் எனக்கும் குடும்ப வாழ்க்கை. நான் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பியவுடன் மீடியாவில் இருந்து விலகினேன் நான் ஆபீஸ் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆபீஸிலிருந்து விலகினேன். பிறகு என் கணவருடன் விவாகரத்து ஆன பின்பு எங்கும் வேலைக்கு செல்லாமல் இதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானேன் அதிலிருந்து நான் மீண்டும் வெளியே வர கொஞ்சம் காலங்கள் ஆனது பின்பு எனது நாய்க்குட்டிகளுக்காகவும் பூனைக்குட்டிகளுக்காகவும் வேலைக்கு செல்ல திட்டமிட்டேன்.

என் குழந்தை :-

எனது முன்னாள் கணவருக்கும் அவருடைய முன்னாள் மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. நானும் என் கணவரும் கல்யாணம் செய்து கொண்ட பின்பும் அவர்களது முன்னாள் மனைவி அவர்கள் குழந்தையை எந்தவித பயமும் இல்லாமல் விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள். எந்த குழந்தையும் தன் அப்பாவுடன் வேறு ஒரு பெண் இருப்பதை பார்த்தால் சிறிது தயக்கம் இருக்க தான் செய்யும் அப்படி இருக்கையில் நானும் அந்த குழந்தையும் நண்பர்களாக ஆவதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. அதன்பின் நானும் என் குழந்தை நெருங்கி நண்பர்கள் ஆனோம் . அவள் வந்து என்னை சொல்வது என்னுடை இன்னொரு அம்மா என்று தான் சொல்வாள் மம்தி ஆண்டி என்றுதான் கூப்பிடுவாள். வெளியில் அனைவரிடமும் எனக்கு மூன்று பெற்றோர்கள் எனவும் சொல்லுவாள் எனக்கும் அவளுக்கும் அப்படி ஒரு நெருங்கிய பந்தம் உருவானது

-விளம்பரம்-

என் எழுத்தாளர் கனவின் விதை :-

என் குழந்தையின் பிறந்த நாள் டிசம்பர் 21ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் டிசம்பர் 22ஆம் தேதி வரும் அப்படி இருக்கையில் என் குழந்தையின் எட்டாவது பிறந்தநாளுக்கு ஏதாவது வித்தியாசமான பிறந்தநாள் பரிசு கொடுக்க வேன்டும் என சிந்தித்தேன். நான் சிறு வயதிலிருந்து கவிதைகள் கட்டுரைகள் கதைகள் எழுதுவேன் அப்புறம் யோசித்து விட்டு என் குழந்தையிடம் உனது நண்பர்கள் உனக்கு பிடித்த நபர்கள் உன்னுடைய வாழ்வில் உனக்கு பிடித்த நேசிக்கும் விஷயங்களைப் பற்றி கூறு என அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

அவள் கூறிய அனைத்தையும் கதாபாத்திரங்களாக மாற்றி ஒரு கதையை எழுதி அவளது எட்டாவது பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்தேன். பிறகு என் குழந்தையின் பத்தாவது பிறந்தநாளுக்கு அந்த கதையின் இரண்டாம் பாகத்தை கொடுத்தேன். அதன் பின்பு சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன் அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் நீங்கள் எழுதுவீர்கள் தானே நீங்கள் எழுதியதை கொடுங்கள் நான் அதை ஒரு பப்ளிஷ்ஷருக்கு அனுப்புகிறேன் என்று சொன்னார். நானும் கொடுத்தேன். ஆவர்கள் அதைப் படித்துவிட்டு நன்றாக உள்ளது அதை பப்ளிஷ் செய்யலாம் நீங்கள் தொடர்ந்து இதை எழுதுங்கள் என்று சொன்னார்கள் இப்படியாக ஒரு எழுத்தாளராக நான் மாறி உள்ளேன்.

ஒர் எழுத்தாளராக என் வாழ்வு தொடங்குகிறது :-

என் வாழ்க்கையில் இரண்டு கனவுகள் இருந்தது ஒன்று நியூரோ சர்ஜன் ஆக வேண்டும் என்ற கனவு. அது வந்து சில பல காரணங்களால் என் வாழ்வில் நடக்க முடியாமல் போனது இரண்டாவது கனவு எழுத்தாளராக வேண்டும். இப்போது எனது எழுத்தாளர் கனவு நடந்து கொண்டிருக்கிறது கடவுள் ஒருவருக்கு எதை எப்போது செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் அவர்களுக்கு அதை சரியான நேரத்தில் செய்வார் இதை நான் நான் நம்புகிறேன் அது மட்டுமில்லாமல் இப்போது நான் ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆகவும் பணிபுரிகிறேன் இனிமேல் என்னுடைய வாழ்வு தூக்கம், சோர்வு இல்லாத ஒரு வாழ்வாக இருக்கும் இனிமேல் என் மூளையில் ஓடிக் கொண்டிருக்கும் பத்தாயிரம் கதைகளையும் அப்படியே எழுத வேண்டும் என்ற ஒரு உணர்வு உள்ளது. என்று நம்மிடையே அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.

Advertisement