O*** அவ்ளோ எலக்காரம் ஆகிட்டேனே – கெட்ட வார்த்தையில் திட்டிய போட்டியாளர், யாருன்னு நீங்களே பாருங்க.

0
398
Mani
- Advertisement -

நிகழ்ச்சியில் மோசமான கெட்ட வார்த்தையை பிக் பாஸ் போட்டியாளர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரம் தொடங்கி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த முறை நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி விட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : வாடகை தாய் விவகாரம் – Not Rechableலில் சிகிச்சை அளித்த மருத்துவர் – சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை.

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. போட்டியாளர்களும், பிக் பாஸ், கமல் என பலரும் எவ்வளவோ சொல்லியும் எனக்கு பணம், புகழை விட குடும்பம் தான் முக்கியம் என்று சொல்லி ஜி பி முத்து வெளியேறிவிட்டார். இவரை தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாவது வாரத்திற்கான எவிக்சன் நடந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் எவிக்ஷன்:

அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். வழக்கம் போல் மூன்றாவது வாரம் தொடங்கி பிக் பாஸ் டாஸ்கை கொடுத்து இருக்கிறார். தீபாவளி அன்று போட்டியாளர்களும் அழகாக பண்டிகையை கொண்டாடி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், இந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்கை கடந்த சீசனிலேயே பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அப்போதே பலவிதமான கலவரங்கள் ஏற்பட்டிருந்தது.

பொம்மை டாஸ்க்:

அதேபோல் இந்த சீசனிலும் பொம்மை டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருக்கிறது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும், மோதியும் விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் போட்டியாளர் மணிகண்டன் கெட்ட வார்த்தை பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பொம்மை டாஸ்க்கில் மணிகண்டன் உடைய பொம்மையை யாருமே எடுக்கவில்லை.

கெட்ட வார்த்தை பேசிய :

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கோபத்தின் உச்சிற்க்கு சென்று என்னுடைய பொம்மையை எடுக்க முடியாத அளவிற்கு நான் கேவலமாக போய்விட்டேனா? என்றெல்லாம் சொல்லி O** என்ற கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோவை தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மணிகண்டன் இப்படி கெட்ட வார்த்தையில் பேசியது முதன்முறை அல்ல. இதனால் மணிகண்டனுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement