அர்ச்சனாவின் பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மாயா. கூடவே மன்னிப்பு கேட்ட பூர்ணிமா

0
686
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அன்னயா ஆகியோர்,கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவின் பெற்றோர்கள் வந்து இருக்கிறார்கள். இதை பார்த்தவுடன் அர்ச்சனா தன்னுடைய அம்மா அப்பாவை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார். பின் அனைவரிடமும் தன்னுடைய அம்மா அப்பாவை அறிமுகம் செய்திருக்கிறார். அவர்களும் நிகழ்ச்சி குறித்து சில விஷயங்களை எல்லாம் பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது அர்ச்சனா அப்பா, கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று விக்ரமனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

காரணம், விசித்ரா- அர்ச்சனா இடையே சில மிஸ்அண்டர் ஸ்டாண்டிங் நடந்துகொள்ளும் போது பாத்ரூமில் அர்ச்சனா புலம்பி கொண்டிருந்தார்.விக்ரம், அக்ஷயா இருவரும் சேர்ந்து அவளுக்கு தெரியாமல் பின்னாடி கிண்டல் கேலி செய்திருந்தீர்கள். நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய வில்லை என்றாலும் அவர்களுடைய கஷ்டத்தை கேலி செய்யாதீர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் விக்ரம் சாரி, நாங்கள் விளையாட்டாக செய்தது என்றெல்லாம் பேசி இருந்தார்.

அதற்குப் பிறகு மாயா, அர்ச்சனாவின் பெற்றோர்கள் காலில் விழுந்து நான் தவறு செய்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஏனென்றால் பிக் பாஸில் அர்ச்சனா உள்ளே சென்ற முதல் வாரத்திலேயே அர்ச்சனாவை மாயா மற்றும் அவரது கேங் தான் கடுமையாக Bully செய்தது இருந்தனர். ஆரம்பத்தில் அழுத அர்ச்சனா பின்னர் ஒற்றை ஆளாக எதிர்த்து நின்று பதிலடி கொடுத்தார்.

-விளம்பரம்-

அந்த எபிசோடுக்கு பின்னர் தான் அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. மாயா அர்ச்சனாவின் பெற்றோர்கள் காலில் விழுந்த பின்னர் பூர்ணிமா, விஷ்ணுவும் நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கூறிஇருந்தனர். எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் ஏகப்பட்ட Wild Card போட்டியாளர்கள் பிக் பாஸில் என்ட்ரி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மூன்றாம் வாரத்திலேயே கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ், அன்ன பாரதி ஆகிய 5 பேர் உள்ளே நுழைந்தனர். இதில் கானா பாலா, பிராவோ, அன்ன பாரதி ஆகி 3 பேர் வெளியேறிய நிலையில் தினேஷ் மற்றும் அர்ச்சனா இருவர் மட்டும் இன்னும் நிலைத்து வருகின்றனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் இவர்கள் இருவரும் நிட்சயம் பைனல் வரை செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கடந்த வாரம் Ticket To Finale டாஸ்க் துவங்கியது அப்போது கூட அர்ச்சனா இந்த டாஸ்கில் விளையாட கூடாது என்று மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், நான் போராடி பைனலுக்கு செல்கிறேன் என்று கமலிடமே சொன்னார் அர்ச்சனா.

Advertisement