பிக் பாஸில் இருந்து வெளியே வந்து மீரா பதிவிட்ட முதல் பதிவு.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!

0
24629
meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிங்கர்களின் ஆதரவை பெற்ற மீரா, சேரன் மீது சொன்ன குற்றச்சாட்டால் ஒரே நாளில் வெறுக்கப்ட்டார்.

-விளம்பரம்-

இவர் வெளியேறுவதற்கு முன்பாக மூன்று நாட்களாகவே இவருடைய பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையும் பாருங்க : இதல்லாம் வரக்கூடாது.! கேமரா மேனை அழுது கொண்டே எச்சரிக்கும் மீரா.! வைரலாகும் வீடியோ.! 

- Advertisement -

அதே போல கடந்த வியாழக்கிழமை வரை சாக்க்ஷிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்திருந்தன. ஆனால், நேற்று ஒரு நாள் மட்டும் சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்தன. இதற்க்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் மீரா, சேரன் தன்னை தப்பாக தொட்டார் என்று குற்றம் சாட்டியதால் தான்.

மேலும், கடைசி நாளில் தான் மீராவிற்கு வாக்கு வரவில்லை என்றும் கமல் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த்துள்ள மீரா ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். ஆனால், உங்களை யாரும் ஆதரிக்கவில்லை என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement