பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக முகெனை வைத்து மீரா போட்ட திட்டம்.! வைரலாகும் ஆடியோ.!

0
3812
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதி போட்டிக்கு சாண்டி, முகென், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் . எனவே, இன்னும் ஆறு நாட்களில் இந்த சீசனின் வெற்றியாளர்கள் யார் என்பது தெரிந்துவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் இதுவரை பிக்பாஸில் இருந்து வெளியேறிய பல்வேறு பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேறிய மீராமிதுன், ரேஷ்மா, மோகன் வைத்தியா, உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருந்தனர்.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் உள்ளே சென்ற அனைவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள போட்டியாளர்களுக்கு சில பரிசுப் பொருட்களை கூட எடுத்துகொண்டு வந்து இருந்தனர் . அந்தவகையில் மீரா மிதுன் முகேனுக்கு ஆடை ஒன்றை பரிசாக அளித்திருந்தார். மீராமிதுன் உள்ளே இருந்தவரை முகென் மீது அந்த அளவிற்கு நெருக்கத்தில் இல்லாமல் தான் இருந்து வந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டில் மீரா இருந்த வரை இவருக்கும் முகேனுக்கு பலமுறை சண்டை கூட வந்திருந்தது ஆனால், திடீரென்று இவர் முகெனை ஆதரிப்பது போல நடிப்பது தான் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

- Advertisement -

அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீராமிதுன் சாண்டி தான் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், எதற்காக நேற்றைய நிகழ்ச்சியில் முகெனுக்கு ஆதரவு தெரிவிப்பது போல மீராமிதுன் நடித்தார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் மீரா மிதுன் உள்ளே செல்வதற்கு முன்பாக அவர் ஆணுடன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது

Meera-mithun

அந்த ஆடியோவில் ஆண் நபருடன் பேசும் மீராமிதுன் நான் உள்ளே சென்றதும் நானும் முகெனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து அதனை வீடியோவாக பதிவிடுங்கள் என்றும், அந்த வீடியோவில் முகென் பாடிய பாடல்களை பின்னணியில் போடுமாறு மீரா பேசியுள்ளார். இதன்மூலம் மீரா மீதுன், முகெனை வைத்து அவளைத் தேடிக் கொள்ளலாம் என்று என்பது மிகவும் அப்பட்டமாக தெரிகிறது.

இதையும் பாருங்க : குடும்ப பிரச்சனை குறித்தும், வெளியேறிய காரணம் குறித்தும் முதன் முறையாக உருக்கமாக பேசிய கவின்.!

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே மீராமிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இறந்தார் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா சவுத் அழகி பட்டத்தை கூட வென்றிருந்தார். ஆனால், அழகிப் பட்டத்தை வைத்து இவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக இவரிடமிருந்து அழகி பட்டம் கூட பறிக்கப்பட்டது. அதேபோல மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தன்னை தவறான இடத்தில் தொட்டதாக ஒரு அப்பட்டமான குற்றச்சாட்டை சேரன் மீது வைத்திருந்தார். ஆனால், குறும்படம் மூலம் சேரன் மீது எந்த தவறும் இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நேரம் இதுதான் உண்மை ஒரு நாள் வெளியே வரும் என்று தன் மீது தவறு இல்லாதது போலவே நடித்துக் கொண்டுதான் வருகிறார். மீரா செய்து வரும் இந்த கேவலமான செயலால் ரசிகர்கள் பலரும் கடுப்பாகி ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement