என் அக்கௌன்ட்ட ஹேக் செஞ்சிட்டாங்க – பல்வேறு சர்ச்சைக்கு பின்னர் மீரா மிதுன் அளித்த வீடியோ.

0
24867
meera
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் இறந்துவிட்டார் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டை மீராமிதுன் போட்டாரா இல்லை வேறு யாராவது மீராமிதுன் கணக்கை ஹேக் செய்து இந்த பதிவை போட்டார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலரும் மற்ற சர்ச்சை போலவே இந்த ட்விட்டையும் போட்டு மீராமிதுன் பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள் என்று கமன்ட் செய்து வந்தார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் பேசுகையில் என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது. இது குறித்து நான் புகார் அளித்து இருக்கிறேன். நரேந்திர மோடி டுவிட்டர் கணக்கு ஹேக் செய்கிறார்கள் என் கணக்கு எல்லாம் என்ன. மேலும், நான் நலமாகத்தான் இருக்கிறேன் பாதுகாப்பாக இருக்கிறேன் என்னுடைய வேலையை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், விஜய் என்னுடைய உறவினர் என்று ஷாக்கொடுத்துள்ளார் மீரா மிதுன்.

வீடியோவில் 35 நிமிடத்தில் பார்க்கவும்

எங்கள் இருவருக்கும் ஒரு சித்தி பாட்டி அத்தை தான். விஜய் எனக்கு தூரத்து சொந்தம் தான். அதைப் பற்றி சொல்ல எனக்கு விருப்பம் கிடையாது. அதே போல என்னுடைய உறவினர்களிடம் எனக்கு மிகப்பெரிய தொடர்பும் கிடையாது. விஜயின் உறவினர் என்பதை நான் ஏன் சொல்ல வேண்டும். இது உறவினர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சனை கிடையாது இது தொழில் ரீதியாக நடக்கும் பிரச்சனை என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

அதேபோல விஜய் மற்றும் சூர்யாவிடம் தான் மன்னிப்பு கேட்பதாக மீராமிதுனின் தாயார் கூறியதாக தொகுப்பாளர் கூறுகையில் ‘இது எனக்கும் விஜய் மற்றும் சூர்யா அவருக்கும் இடையிலான பிரச்சனை இதில் என் அம்மா யார். என் அம்மா மன்னிப்பு கேட்டால் கூட நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். வேண்டுமென்றால் விஜய் மற்றும் சூர்யா என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும். என் அம்மாவை மிரட்டி யாராவது இப்படி பேச வைத்திருப்பார்கள். இதுவே என் அப்பா இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்.

Advertisement