சொன்னதை போல முகேனை வலையில் சிக்க வைக்க முயற்சித்த மீரா.! கரியை பூசிய முகென்.!

0
46070
Mugen-meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ரசிகர்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களும் ரசிகர்கள் வெறுக்கும் போட்டியாளர்களும் இருக்க தான் செய்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்தார் சூப்பர் மாடல், நடிகை, அழகி என்று பல்வேறு விதமாக தன்னை சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தான்.

-விளம்பரம்-
mugen

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதி போட்டிக்கு சாண்டி, முகென், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் . எனவே, இன்னும் ஆறு நாட்களில் இந்த சீசனின் வெற்றியாளர்கள் யார் என்பது தெரிந்துவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் இதுவரை பிக்பாஸில் இருந்து வெளியேறிய பல்வேறு பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேறிய மீராமிதுன், ரேஷ்மா, மோகன் வைத்தியா, உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருந்தனர்.

இதையும் பாருங்க : தர்ஷன் – ஷெரீனை கொச்சை படுத்தும் பதிவை லைக் செய்த வனிதா.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

- Advertisement -

ஆனால், மீரா மிதுன் மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாகவே ஒரு திட்டம் போட்டு தான் சென்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முகெனுக்கு தான் ஆதரவு அதிகம் என்று உணர்ந்த மீரா மிதுன் , பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முகெனும் தானும் இருக்கும் விடியோவை பணம் கொடுத்து பதிவிட சொன்ன ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதற்கு ஏற்றார் போல தான் நேற்று மீரா மிதுனும் நடந்து கொண்டார் .

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் உள்ளே சென்ற அனைவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள போட்டியாளர்களுக்கு சில பரிசுப் பொருட்களை கூட எடுத்துகொண்டு வந்து இருந்தனர். அந்தவகையில் மீரா மிதுன் முகேனுக்கு ஆடை ஒன்றை பரிசாக அளித்திருந்தார். ஆனால், அதனை கேமராவில் பதிவாக வேண்டும் என்பதற்காக முகெனை தனியாக அழைத்து அதனை கேமரா முன் காட்டி பின்னர் முகேனுக்கு கொடுத்தார். அதே போல முகெனின் கண்ணாடியை கூட மீரா அணிந்து கொண்டார்.

அதன் பின்னரும் முகென் எங்கு சென்றாலும் ஆவர் பின்னாடியே சென்றார் மீரா. ஆனால், முகென் மீராவை சுத்தமாக கண்டு கொள்ளாமல் மீரா முகத்தில் கறியை பூசினார். இருப்பினும் எப்படியாது முகெனிடம் நெருக்கமாக இருக்க மீரா மிதுன் எவ்வளவோ பாடு பட்டார் . முகென் கார்டன் ஏரியாவில் அமர்ந்து விருந்து சாப்பிட்ட போதும் அவர் பக்கத்தில் தான் அமர்ந்தார் மீரா.

மேலும், சாண்டி மற்றும் முகென் ஒன்றாக மேடையில் நடனமாடிய போதும் வேண்டுமேன்றே கேமராவில் பதிவாக வேண்டும் என்று முகென் அருகில் சென்று ஆடினார் மீரா. அப்போதும் முகென் அவரை சுத்தமாக கண்டு கொள்ளவே இல்லை. இதனால் மீரா, தான் நினைத்தது நடக்கவில்லை என்று சோகத்தில் ஆழ்ந்தார். இருப்பினும் இதையெல்லாம் வைத்து மீரா ஆர்மி கண்டிப்பாக முகென் மற்றும் மீரா இருவரையும் இணைத்து கண்டிப்பாக வீடியோவை தயார் செய்து விடுவார்கள் என்று தான் தோன்றுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே மீராமிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இறந்தார் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா சவுத் அழகி பட்டத்தை கூட வென்றிருந்தார். ஆனால், அழகிப் பட்டத்தை வைத்து இவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக இவரிடமிருந்து அழகி பட்டம் கூட பறிக்கப்பட்டது. அதேபோல மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தன்னை தவறான இடத்தில் தொட்டதாக ஒரு அப்பட்டமான குற்றச்சாட்டை சேரன் மீது வைத்திருந்தார். ஆனால், குறும்படம் மூலம் சேரன் மீது எந்த தவறும் இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நேரம் இதுதான் உண்மை ஒரு நாள் வெளியே வரும் என்று தன் மீது தவறு இல்லாதது போலவே நடித்துக் கொண்டுதான் வருகிறார். மீரா செய்து வரும் இந்த கேவலமான செயலால் ரசிகர்கள் பலரும் கடுப்பாகி ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement