காயங்களுடன் தான் வந்தார் – பிக் பாஸில் இருந்து வெளியேறிய நமீதா குறித்து மருத்துர்கள் ஷாக்கிங் தகவல்.

0
29822
namitha
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் பசுமை வண்ணம் கான்செப்ட் போன்று பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
namitha

இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார் என்று அறிவிக்கப்பட்டது. நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதை குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.இப்படி ஒரு நிலையில் நமீதாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.

இதையும் பாருங்க : அர்ஜுன் கிட்ட இருந்து கமல் கத்துக்கணும் – சர்வைவரில் போட்டியாளர்களை வெளுத்து வாங்கும் அர்ஜுன்.

- Advertisement -

இந்த நிலையில் நமீதா மாரிமுத்து வெளியேறியதை குறித்து தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில், நமீதா மாரிமுத்து கொரோனா தொற்றால் வெளியேறி மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரித்தபோது நமிதா மாரிமுத்துவுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து நமிதா அவர்கள் காயங்களுடன் வெளியேறி உள்ளார்.

பின் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரி முதல் உதவி அளிக்கப்பட்டது. பின் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் என்ன விதமான பாதிப்புகள் மற்றும் அவமானங்கள் நிகழ்ந்தாலும் நிகழ்ச்சி 100 நாட்கள் முழுமை பெறும் வரை வாயை திறக்கக் கூடாது என்று ஒப்பந்தம் அடிப்படையில் சம்பளம் வழங்குவார்கள். இதனால் தான் நமீதா மாரிமுத்து வாயை திறக்காமல் உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான தாமரைச்செல்வி என்பவருக்கும் நமிதாவுக்கும் இடையே வந்த வார்த்தை மோதல் கலவரமாக மாறியதாகவும் அப்போது அவர் கோபத்தில் பொருட்களை தூக்கி போட்டதில் நமீதாவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement