பரபரப்பாக சென்ற நமிநேஷன் Free டாஸ்க் – இறுதி வரை நின்ற இருவரில் வெற்றி பெற்றது யார் பாருங்க. Unseen Video இதோ.

0
581
abhinay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 74 நாட்களை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இடையே இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து 9 பேர் வெளியே இருக்கும் நிலையில் 12 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்கள். மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அனைவரையுமே நாமினேட் செய்து இருந்தார் பிக்பாஸ். அதேபோல இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

யார் யார் வெளியில் :

இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருப்பதால் நமினேஷனில் இருந்து தப்பிக்க இந்த வாரம் முழுவதும் பல விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்கில் முதல் டாஸ்கில் சிபி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் டாஸ்கில் நிரூப் வெற்றிபெற்றார். இதன் மூலம் இவர்கள் இருவரும் இந்த வார நமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மீதம் இருக்கும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க டாஸ்கில் உயிரைக்கொடுத்து போராடி வருகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதங்களும் சண்டைகளும் வெடித்துக் கொண்டு வருகிறது. அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் ராஜு மற்றும் அக்ஷராவிற்கு இடையே பல முறை சண்டை வெடித்தது. இதில் பஞ்சாயத்து செய்ய சென்ற பிரியங்காவின் தலையும் உருண்டது.

ராஜு அக்ஷரா வெளியில் :

நேற்றைய டாஸ்க்கின் முடிவு வரை ராஜு, அக்ஷரா, தாமரை, அமீர், அபிநய் ஆகிய 5 பேர் மட்டும் நிலைத்து நின்று கொண்டிருந்தனர். இறுதியாக நேற்று நடைபெற்ற டாக்கில் அக்ஷரா மற்றும் ராஜுவுக்கு பிரச்சனை ஏற்பட்டதோடு நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது தாமரை இந்த டாஸில் வெற்றிபெற்று நாமினேஷன் இருந்து தப்பித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இறுதியில் நிலைத்த அபிநய் – தாமரை :

இன்று வெளியான மூன்றாம் இரவில் அபினை, அமீர், ராஜு, தாமரை ஆகிய நால்வர் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்கள். இதன் மூலம் நேற்று நடைபெற்ற டாக்கில் அக்ஷரா வெளியேறி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல இன்று ஒளிபரப்பான இரண்டாம் புரோமோவில் தொட்டியில் இருந்து காயின்களை பொறுக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் தாமரை அபிநய் மற்றும் அமீர் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ப்ரோமா மூலம் ராஜு இந்த டாஸ்கில் வெளியேற பெற்றிருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் அன்சீன் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

https://youtu.be/ATvwgvqYrP0

அதில் தாமரை மற்றும் அபிநய் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அமீரும் இந்த டஸ்கில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் இந்த அண்ட் சீன் வீடியோ இறுதியில் தாமரை வெற்றி பெற்றிருப்பது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் பிக்பாஸ் பொருத்தவரை ப்ரோமோவை பார்த்து நாம் எதுவும் முடிவு செய்துவிட முடியாது. மேலும், இந்த ப்ரோமோவில் பார்ப்பதுதான் டாஸ்கின் இறுதியா ? அல்லது இதற்குப் பின்னர் ஏதாவது இருந்ததா என்பது மெயின் எபிசோடு பார்த்த பின்பே தீர்மானிக்க முடியும். இருப்பினும் தாமரை மற்றும் அபிநய் ஆகிய இருவரில் அபிநய் வெற்றி பெற கூடாது என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Advertisement