பிக்பாஸே ஏற்றுக்கொண்ட சிஷ்யன்.! இதுவரை யாரையும் இப்படி செல்லப்பெயர் வைத்து அழைத்ததே இல்லை.!

0
20232
bigg-boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 7 வாரத்தை நிறைவு பெற்றுள்ளது. இந்த வார தலைவராக சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் சாண்டி தான் மற்ற அணைத்து போட்டியாளர்கள் அனைவரையும் மிகவும் சந்தோசமாக வைத்து வருகிறார். மேலும், இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவர் பற்றியும் சாண்டி பாடல் எழுதி பாடியுள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் சாண்டியை கன்பெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், இந்த வாரம் நாமினேஷனில் உள்ள லாஸ்லியா,அபிராமி ,சாக்க்ஷி ஆகிய மூவருக்கும் பாடல் ஒன்றை எழுத வேண்டும். அந்த பாடலை யாருக்கும் தெரியாமல் எழுத வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், இதற்கு உதவியாக கைவினை வைத்து கொள்ளலாம் என்று அறிவித்த பிக் பாஸ், இந்த மூன்று பாடலையும் நாளை கமல் சார் முன்பு பாட வேண்டும் அதற்கு முன்பாக யாருக்கும் இந்த பாடலை பாட வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு சாண்டியும் சரி குருநாதா என்று கூறினார். அதன் பின்னர் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கிறதா குருநாதா என்று சாண்டி கேட்க, சிறிது நேரம் அமைதியாக இருந்த பிக் பாஸ்’நீங்கள் போகலாம் சிஷ்யா’ என்று செல்லமாக சாண்டியை அழைத்தார். இதுவரை மூன்று சீசன் நிறைவடைந்திருந்தாலும் இதுவரை இது போல பிக் பாஸ் யாரையும் இப்படி பட்டப்பெயர் வைத்து அழைத்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement