காது கொடுத்து கேட்டேன், ஆஹா குவா குவா சத்தம் – பிரியங்கா பகிர்ந்த ஹாப்பி நியூஸ். ரசிகர்கள் வாழ்த்து.

0
821
priyanka
- Advertisement -

தொகுப்பாளினி பிரியங்காவின் வீட்டில் விரைவில் குழந்தை சத்தம் கேட்க போகும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதில் தற்போது விஜய் தான் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.

-விளம்பரம்-

இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

- Advertisement -

பிரியங்கா பற்றிய தகவல்:

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருந்தார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி:

மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி இருந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றி இருந்தார்கள். பிக் பாஸ் சீசன் 5ல் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பிபி ஜோடிகள் நிகழ்ச்சி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் தன்னுடைய தொகுப்பாளினி வேலையை தொடங்கி விட்டார். மேலும், இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள். இதனால் இவரை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செகிறார்கள். தற்போது பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிரியங்காவின் வீட்டில் விரைவில் குழந்தை சத்தம் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

பிரியங்கா வீட்டில் குழந்தை சத்தம்:

அதாவது பிரியங்காவிற்கு ரோகித் என்ற ஒரு தம்பி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது பிரியங்காவின் தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சியான செய்தியை தான் பிரியங்கா, தன்னுடைய தம்பி மற்றும் தம்பி மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ஆண்டி கிட்ட வா மா என்று குழந்தையை குறித்து பதிவிட்டிருக்கிறார். விரைவில் அத்தையாக போகும் பிரியங்காவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement