தாமரை குறித்து அன்றே கணித்த பிரியங்கா – வெளி வரும் தாமரையின் உண்மை முகம்.

0
1656
priyanka
- Advertisement -

பிக்பாஸ் தாமரையின் உண்மை முகத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது மூன்று வாரங்களை கடந்து உள்ளது. வழக்கம் போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் புகையத் தொடங்கியது. இந்த முறை பிக்பாஸ் வீட்டில் தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் தான் அதிகமாக உள்ளார்கள். மேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு முதலில் நதியா சாங்க் வெளியேறினார். அவரை தொடர்ந்து அபிஷேக் ராஜா வெளியேறினார்.

-விளம்பரம்-

தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் வீட்டில் போட்டிகள் தொடங்கியுள்ளார்கள். பிக்பாஸ் வீட்டில் பஞ்சபூதம் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்ட போதிலிருந்தே தாமரைக்கும் வீட்டில் உள்ள சில ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே பிரச்சினை தொடங்கியது அனைவருக்கும் தெரிந்ததே. தாமரையிடமிருந்து ஸ்ருதி நாணயத்தை எடுத்ததிலிருந்து தாமரைக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பித்து விட்டது. இதனால் தாமரையின் உண்மையான முகம் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்களும் கருத்துகளை பதிவிட்டு வந்தார்கள்.

இதையும் பாருங்க : ‘பொம்பள சோக்கு கேக்குதோ’ – இளம் நடிகையுடன் ரொமான்ஸ், நாசரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நேற்று நடந்த கிராமமா? நகரமா? என்ற டாஸ்க்கில் தாமரை தன்னுடைய உண்மையான சுயரூபத்தை காண்பித்து விட்டார். நேற்றைய எபிசோட்டில் வீட்டில் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து கிராமமா? நகரமா? என்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் பிக்பாஸ் வீட்டை புரிந்து விளையாடுபவர்கள் கிராமமா? நகரமா? என்று சவால் வந்ததால் பிரியங்கா நகரம் தான் என்று பேசினார். உடனே தாமரை கோபமாகி தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டார். தாமரை முழுக்க முழுக்க ஸ்ருதியை தாக்கி பேசியது அனைவருக்குமே அப்பட்டமாக தெரிந்தது. தாமரை பேச்சில் ஒரு வன்மத்தை வைத்து பேசினார்.

இதை மற்ற போட்டியாளர்களும் கவனித்தார்கள். கடைசியில் தாமரை ஓட பேச்சால் கிராமம் டீம் தோற்றுவிட்டது. பின் கடைசியில் பெஸ்ட் டீம் என்ற அவார்டு நகர மக்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் தாமரையின் பேச்சால் அவருடைய மொத்த இமேஜ் டேமேஜ் ஆனது என்று சொல்லலாம். பின் ராஜீவ் தாமரைக்கு அட்வைஸ் செய்தார். ஆனால், தாமரை மீண்டும் சுருதியும் பவானியும் செய்ததை பற்றியே புலம்பினார். பின் பிரியங்காவும், ராஜீவும் சேர்ந்து தாமரையை பற்றி பேசினார்கள். தாமரையின் திடீர் மாற்றத்தையும் அவருடைய செயல்கள் குறித்தும் பேசி இருந்தார்கள். ஆரம்பத்தில் நாம் தாமரையை காப்பாற்ற நினைத்தது உண்மை தான்.

-விளம்பரம்-

ஆனால், இனிமேல் இப்படி எல்லாம் செய்யக்கூடாது. அவளுடைய கேம் அவள் விளையாடும் என்று பிரியங்கா சொன்னார். அதுமட்டுமில்லாமல் தாமரை ஆரம்பத்தில் சிம்பதி கிரியேட் பண்ணி மற்றவர்களை தன் பக்கம் இழுத்தார் என்றும், இப்போது அவருடைய சுயரூபம் வெளியே வந்தது என்றும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் வெளியே பார்க்கும் நமக்கும் தெரியவந்தது. மேலும், கொஞ்சம் கொஞ்சமாக தாமரையின் சுயரூபம் வெளியே வருவதால் பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாள் இவர் இருப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதுமட்டும் இல்லாமல் தாமரையின் நாணய விஷயத்தில் யார் பக்கம் நியாயம்? உண்மை இருந்தது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Google News

Advertisement