நான் ரொம்ப Fun பண்ற பொண்ணு. ஆனால் – கதறி அழுத அனிதா சம்பத்.

0
1049
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமான மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த மூன்று வாரத்தில் அன்பு, சண்டை, பல பஞ்சாயத்துக்கள் அரங்கேறி இருந்தது. நாளுக்கு நாள் பிக் பாஸின் சுவாரசியம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் நாமினேஷனில் பாலாஜி, சுரேஷ், சக்ரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், ஆரி ஆகியோர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், ஆஜீத் தன்னிடம் இருந்த ‘ஏவிக்ஷன் ப்ரீ பாஸ்’ ஐ வைத்து தப்பித்துவிட்டார். அஜீத் ‘ஏவிக்ஷன் ப்ரீ பாஸ்’ ஐ வைத்து தப்பித்து விட்டதால், ஆஜீத்திற்கு அடுத்தபடியாக குறைவான வாக்குகளை பெற்ற அனிதா சம்பத் அல்லது சுரேஷ் சக்ரவர்த்தி இருவரில் யாரவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகவில்லை என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் கமல்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க நவராத்திரி விழாவின் சிறப்பு கொண்டாட்டமாக நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சி 6.30 மணி முதல் 10.30 வரை 4 மணி நேரம் ஒளிபரப்பாகி இருந்தது. அதே நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது. அதில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ச்சனாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால், அவரை தவிர மற்ற அனைவரும் நாமினேஷன் தேர்வில் இடம்பெற்றனர்.

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஷிவானி, அர்ச்சனா, ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகிய 5 பெயரை தவிர பாலாஜி, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, வேல் முருகன், சுரேஷ், அனிதா, ஜித்தன் ரமேஷ், ஆஜித்,சனம் ஆகிய 11 பேரும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement