இதையெல்லாம் பாத்துகிட்டு இருக்க முடியாது – பாலாஜியை வெளுக்கும் கமல்.

0
1246
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸின் நேற்றய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார் கமல். இந்த டாஸ்க் மூலம் போட்டியாளர்களை வச்சி செய்தார் பிக் பாஸ். இந்த டாஸ்கில் எந்த போட்டியாளர்கள் சொன்ன காரணத்தையும் பிக் பாஸ் ஏற்கவில்லை. இதனால் போட்டியாளர்களே தாங்கள் இந்த 60 நாட்களில் மக்களுக்கு சொன்ன கருத்து என்ன என்பது தெரியாமல் குழம்பி போனார்கள். இந்த டாஸ்க் மூலம் பிக் பாஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறார் என்று ரசிகர்களுக்கு கூட புரியாமல் தான் இருந்து வருகிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று கமல், இந்த வாரம் முழுதும் நடந்த பல பிரச்சனையை ஆராய இருக்கிறார். பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வருவதால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.மேலும், அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பிரச்சினைகளை கமல் அலசி ஆராய்வார். ஆனால், இந்த சீசனில் இதுவரை அப்படி எதுவுமே நடந்தது கிடையாது. அவ்வளவு ஏன் ரசிகர்களுக்கு அறிவுரை என்பதை கூறுவதற்கு பதிலாக டிப்ஸ் என்றுதான் கூறி வருகிறார்.

ஆனால், கடந்த வாரம் சம்யுக்தாவிற்கு குறும்படம் போட்டு மக்களின் குறையை தீர்த்து வைத்தார் பிக் பாஸ் . இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாலாஜி தன்னை செருப்பால் அடித்துக்கொண்டது குறித்து கேட்டுள்ள கமல், இந்த விஷயத்தில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பேசுவது போல தெரிகிறது. மேலும், இது வன்முறையின் விளிம்பு, இதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார் கமல்.

-விளம்பரம்-
Advertisement