இதை தான் வெளியே இருபவங்க செருப்பால் அடிப்பாங்க – நிஷா ஆவேசம்.

0
2443
nisha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேறி இருந்தார். அதேபோல கடந்த வாரம்தான் தொகுப்பாளர் அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். கடந்த 2 வாரமாக கொஞ்சம் சலிப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது அதற்கு காரணமே பிக் பாஸ் கொடுத்து வரும் டாஸ்க் தான்.

-விளம்பரம்-

இந்த சீசன் ஆரம்பித்த ஓரிரு தினங்கள் மிகவும் சலிப்பாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி செய்த சில சேட்டைகளால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடித்தது. ஆரம்பத்தில் இவருக்கும் அனிதாவிற்கும் இடையே ஒரு பிரச்சினை வெடித்தது. அது ஓரிரு நாட்கள் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனை நேற்று பூதாகாராமாக வெடித்தது. சமீபத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார் பிக் பாஸ்.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அதிலும் சனம் ஷெட்டி சுரேஷ் சக்கரவர்த்தியை வாடா போடா என்று கண்டமேனிக்கு வசைபாடியதைப் பார்த்து ரசிகர்கள் அனைவருமே ஷாக்காகினார்கள். அதன் பின்னர் தான் தெரியாமல் அடித்து விட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று சுரேஷ் சக்கரவர்த்தி மன்னிப்பும் கேட்டுவிட்டார்.

இப்படி ஒரு நிலையில் போட்டியாளர்களுக்கு இம்முறை பட்டிமன்றம் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசியுள்ள நிஷா, புறணி பேசுவது அழகுங்க, ஆனால் அது ஒருவரின் உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும் போது தான் அந்த புரணி அசிங்கம். அந்த புறணியை தான் வெளியே இருப்பவர்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement