ஆரிக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கிறீங்க – அழுது புலம்பும் சம்யுக்தா.

0
1117
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தில் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து ரேகா மற்றும் வேல்முருகன் வெளியேறிய நிலையில் அவர்களின் வெளியேற்றத்தை பூர்த்தி செய்யும் விதமாக அர்ச்சனா மற்றும் ஒரு சுச்சித்ராவைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இவர்கள் இருவரும் நுழைந்த பின்னர் பிக் பாஸ் வீட்டில் எக்கச்சக்க பஞ்சாயத்துகள் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் சுசித்ரா நுழைந்த பின்னர் பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் இருக்கும் குருபீசம் பற்றிய பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் இந்த வாரம் ஆரி தான் மிகவும் லைம் லைட் ஆக இருந்து வருகிறார். இந்த வாரம் சனம் ஷெட்டி மற்றும்பாலாஜிக்கும் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் ஆரிக்கும் சம்யுக்தாவிற்கும் நீதிமன்ற டாஸ்கில் ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த வாரம் ஹைலைட்டான விஷயமாக கருதப்பட்டது.

- Advertisement -

இன்று வெளியான முதல் ப்ரோமோ வில் இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் யார் மோசமாக செயல்பட்டார்கள் என்பதை தேர்ந்தெடுக்க கூறப்பட்டிருக்கிறது இதில் ஒரு சிலர் சோம் பெயரை சிறப்பாக செயல்பட்டார் என்று முன்மொழிந்து. உள்ளனர் அதேபோல அனிதா சனம் ஷெட்டி அஜித் போன்றவர்கள் ஆரி பெயரை கூறியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஆரிக்கு ஆதரவு தெரிவித்ததால் சம்யுக்தா அழுதுள்ளார்.

இது ஒருபுறமிருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, அனிதா, பாலாஜி, அர்ச்சனா, சனம் ஷெட்டி, சோம் சேகர், சுரேஷ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். பல்வேறு தனியார் இணைய தளத்தில் நடத்தப்பட்டுவரும் வாக்கெடுப்புகளில் இந்த வாரம் பாலாஜியை விட ஆரிக்கு தான் அதிக அளவில் வாக்குகள் இருந்து வருவதாக தெரிகிறது மேலும் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement