பாலிவுட்டில் மிக பிரபலமான சீரியல் நடிகை ரஷ்மி தேசாய். இவர் நடிகை மட்டும் இல்லாமல் ஒரு மாடலும் ஆவார். ரஷ்மி தேசாய் அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜீ டிவியில் ஒளிபரப்பான ராவண் என்ற தொடரில் மண்டோதரியாக நடித்ததன் மூலம் தான் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில தொடர்களில் நடித்தார். ஆனால், அவர் பெரிய அளவு அறியப்படவில்லை. பிறகு 2008 ஆம் ஆண்டு இவர் இந்தியில் ஒளிபரப்பான உத்தரன் என்ற தொடரில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகை ரஷ்மி தேசாய் அவர்கள் இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார்.
தற்போது இவர் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் தில் ஸே தில் தக் என்ற தொடரில் நடித்து வருகிறார். ரஷ்மி தேசாய் அவர்கள் 2012 ஆம் ஆண்டு தன்னுடன் உத்தரன் தொடரில் நடித்த நந்திஷ் சந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது நடிகை ரஷ்மி தேசாய் அவர்கள் தன்னை விட இரண்டு வயது இளையவரான நடிகர் அர்ஹான் கான் என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அர்ஹான் கான் ஒரு மாடல் மற்றும் நடிகர் ஆவார். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இவர்களுடைய நட்பு காதலாக மாறி உள்ளது.
இதையும் பாருங்க : அக்காவை மிஞ்சிய தங்கை. பொது நிகழ்ச்சிக்கு படு கிளாமர் உடையில் சென்ற அக்ஷரா ஹாசன்.
மேலும், இவர்கள் இருவரும் பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. வருடம் வருடம் இந்தியா முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சி சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவங்களை பற்றி கூறுவார்கள். இது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் ஹிந்தி பிக் பாஸ் 13 வது சீசனில் பங்கேற்ற நடிகை ரேஷ்மி தேசாய் அவர்கள் தனது இளம் வயதில் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியது, நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். நான் பெண்ணாக இருப்பதாலேயே என்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்தேன். பல கஷ்ட்டங்களை அனுபவித்தேன். நமக்கு ஏன் பெண் பிறந்தாள்? அவ்வளவு தான் இனி பண பிரச்சனை என பலர் கூறுவார். பெண்ணாக பிறந்ததே குற்றம் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்.
நான் பிறந்ததனால் தான் என் குடும்பத்திற்கு மிகவும் பாரமாக இருக்கிறேன் என்று எனக்கு தோன்றியது. இதனால் ஒரு நாள் நான் விஷம் குடித்து விட்டேன். பின் எனது ஆண்டிக்கு கால் செய்தும் இது குறித்து கூறினேன். பின் அவர் என்னை மருத்துவமனையில் சேர்த்து என் உயிரைக் காப்பாற்றினார்கள். அதற்கு பிறகும் என் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், நான் எதற்காகவும் “I never gave up” என்று கூறியிருந்தார்.