மகளை பிரிந்த கவலையில் நடிகை ரேகா மற்றும் அவரின் கணவர். இதான் காரணமாம்.

0
1269
rekha
- Advertisement -

மகளை பார்க்க முடியாமல் தவிக்கும் ரேகாவின் தவிப்பு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ரேகா. இவர் தமிழில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினி, கமல், சத்யராஜ் என்று பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் டீச்சர் என்றால் முதலில் நினைவிற்கு முதலில் வருவது ரேகா தான். 1986 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் என்ற டீச்சராக ரேகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது புன்னகை மன்னன் படம் தான்.

-விளம்பரம்-

அதுவும் இந்த திரைப்படத்தில் கமல் மற்றும் ரேகாவும் தற்கொலை செய்து கொள்வது போல இடம்பெறும் காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

- Advertisement -

ரேகா குடும்பம் பற்றிய விவரம்:

பின் ரேகா குடும்பம், பிள்ளை என்று செட்டில் ஆகி விட்டார். திருமணத்திற்கு பின் இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின் மீண்டும் இவர் தென்னிந்திய சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சீரியல், நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பங்கு பெற்று வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் ரேகா போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரக போட்டியாளராக பங்கு பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரேகா:

ஆனால், இவர் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக இவர் “பியார் ப்ரேமா காதல்” படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இவர் யூடியூபில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதோடு இவர் தன் மகளுடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ரேகாவை விட அவர் மகள் அழகாக இருக்கிறார் என்று எல்லாம் கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரேகாவின் மகள் குறித்த தகவல்:

இந்த நிலையில் நடிகை ரேகா தனது மகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தவிப்பு குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். நடிகை ரேகாவுக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் படித்து வந்தார். பின் படிப்பை முடித்து விட்ட அவர் அங்கேயே வேலை பார்த்து வருகிறார். மேலும், சில வருடங்களாகவே கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதால் ரேகா மகளால் சென்னை திரும்ப முடியவில்லை. வேறு வழியில்லாமல் ரேகாவின் மகள் அமெரிக்காவிலேயே இருக்கிறார். இந்நிலையில் இதுபற்றி ரேகா கண்ணீர் மல்க கூறியிருப்பது, என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்து விட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறார்.

மகளை நினைத்தும் ஏங்கும் ரேகா:

மகளை தனியே விட்டுவிட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது. அதோடு விசா கிடைக்காமல் நானும் என் கணவரும் கவலையுடன் இருக்கின்றோம். என் மகள் அமெரிக்காவில் படித்து விட்டு அங்கேயே வேலை செய்வதை பார்த்து சிலர் பொறாமை படுகிறார்கள். நான் யார் மீதும் பொறாமைபடுவதில்லை. நான் எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன். அதனால் தான் இந்த தலைமுறை நடிகைகளுடன் போட்டி போட முடிகிறது என்று கூறி இருந்தார். இப்படி ரேகா கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement