ராபர்ட் மற்றும் ரச்சிதா இருவருக்கும் ஒரே கட்டிலில் படுக்கையா ? என்னய்யா நடக்குது.

0
622
robert
- Advertisement -

பிக் பாஸ் என்றாலே சண்டையும் சச்சரவும் நடப்பது வழக்கமான ஓன்று தான். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க்கினால் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வதை போல விளையாடி வருகின்றன. இருந்தாலும் இந்த டாஸ்க் சில சமயங்களில் நம்மால் சில கியூட் காட்சிகளையும் பார்க்கமுடிகிறது. இந்நிலையில் தான் தற்போது கொடுக்கப்பட்ட டாஸ்க்கினால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது ரட்சிதா விடம் வலிந்து எங்கே போனாலும் அவர் பின்னாடியே சென்று காதலர்களை போல நடந்து கொண்டுவரும் ராபர்ட் மாஸ்டரை பற்றி ஏற்கனனே சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில் தற்போது நடந்துள்ள சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல ஆகியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொடக்கி ஒரு மாதமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் வீட்டிலிருந்து டிக் டாக்கர் ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, கானா பாடகர் அசல் கோளாறு, மாடல் அழகி செரீனா மற்றும் சீரியல் நடிகை மகேஸ்வரி போன்றவர்கள் வெளியேறியுள்ளார். சுமாராக விளையாடி வந்த ராம் வெளியேறுவார் என்றிருந்த நிலையில் நன்றாக கன்டென்ட் கொடுத்து வந்த மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு மட்டுமல்ல போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கி கடந்த ஒரு மாதமாக ஒரே உள்கட்டமைப்பை பார்த்த நமக்கு ஆசிரியத்தை ஏற்படுத்தும் வகையில் நேற்று அரண்மனை போல பிக் பாஸ் வீடானது மாற்றப்பட்டது. அதில் வரவேற்பறையில் வீர வாழ்கலும் நகை அணிகலன்களும், மற்றொரு அமரும் இடத்தில் அரண்மனை போல நாற்காலிகள், படுக்கும் அறையின் முற்றிலுமாக மாற்றப்பட்டது பார்ப்பதற்கு அரண்மனை போல மிகவும் அழகாக இருந்தது.

இந்நிலையில் தான் போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க்கானது வழங்கப்பட்டு அதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரட்சித்தா, இளவரசராக மணிகண்டனும், ஜனனி இளவரசியாகவும், விக்ரமன் ராஜகுருவாகவும், ஏடிகே அருங்கட்சியாக தலைவராகவும், ராம் கண்தெரியாதவராகவும், தனலட்சிமி கதை அளக்கும் அளக்கவும், ஆயிஷா உறங்கும் நபராகவும், பாதுகாவலராக கதிர், நிவாஷினி, குயின்ஸி, ஷிவின்,அமுதவாணன் இருந்தனர் மேலும் மைனா காது கேளாதவராகவும் அவர்களுக்கு கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இப்படைப்பட்ட நிலையில்தான் ராஜகுடுப்பதின் படைத்தலைவனான அசீம் ராஜாவான ராபர்ட் மாஸ்டரும், ராணியான ரட்சிதாவும் ஒரே கட்டிலில் உறங்க வேண்டும் எனக் கூறினார். இதற்க்கு ராபர்ட் மாஸ்டர் சிரிக்க ரட்சிதா கோவப்பட்டு என்னால் அப்படியெல்லாம் தூங்க முடியாது எனக்கு தனியாக ஒரு பேட் வேண்டும் என்று கோவமாக கூறினார். ஏற்கனவே ரட்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகி ரட்சிதாவின் கணவர் நடிகர் தினேஷ் அதைப்பற்றி பேசியிருந்த நிலையில் இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி கேலிக்கைக்கு உள்ளாகி வருகிறது.

Advertisement