என்னை ஏமாற்றிவிட்டார் – அட்லீ மீது புதிய குண்டை தூக்கி போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.

0
165
- Advertisement -

ராஜா ராணி படத்தினால் நான் ஏமாந்து விட்டேன் என்று நடிகை சாக்ஷி அகர்வால் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் சாக்‌ஷி அகர்வால். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்து இருந்தார். பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கோணல் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவர் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ஆனால், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது காலா படத்தின் மூலம் தான்.

- Advertisement -

சாக்ஷி அகர்வால் திரைப்பயணம்:

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் மூலம் சாக்‌ஷி அகர்வால் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார். இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த விஸ்வாசம் படத்தில் மருத்துவராக சாக்ஷி அகர்வால் நடித்து இருந்தார். அதற்க்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாக்ஷி போட்டியாளராக கலந்து இருந்தார்.

பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் :

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இவருடைய நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தில் சாக்ஷி அவர்கள் ஆக்சன் ரோலில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சாக்ஷி அகர்வால் பேட்டி :

பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பகீரா படத்தில் வில்லி வேடத்தில் நடித்திருக்கிறார். ஹங்காமா ஒடிடி தளத்தில் வெளியான என் எதிரே ரெண்டு பாப்பா என்ற படத்தில் சாக்சி கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா ராணி படத்தில் நடித்தது குறித்து சாக்ஷி அகர்வால் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், ராஜா ராணி படம் வாய்ப்பு வரும்போது நான் பெங்களூரில் இருந்தேன். அப்போது தான் நான் மாடலிங் துறையில் கால் பதித்த நேரம். சென்னையில் இருந்து என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து கூறினார்கள்.

ராஜா ராணி படம் குறித்து சொன்னது:

அப்போது ஆர்யா தான் ஹீரோ, அட்லீ இயக்குனர். அந்த படத்தின் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான அழைப்பு என்று சொன்னார்கள். தயாரிப்பு பற்றி கூட எனக்கு அப்போது தெரியாது. நான் இரண்டு நாட்கள் ஷூட்டிங் போனேன். அதுக்கு பிறகு அவர்களின் அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால், படத்தோட சூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனாலும் நான் டேட்டுக்காக வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தேன். நான் இயக்குனர் கிட்ட பேசிட்டு போயிருக்கணும். அந்த தவறு எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அது எனக்கு ஒரு நல்ல படம். அதைப் பற்றி நான் பெரிதாக பேச விரும்பவில்லை என்று வேதனையாக கூறியிருந்தார்.

Advertisement