ஆரி கன்னத்தில் முத்தமிட்ட சனம்- நேற்றய நிகழ்ச்சியின் Unseen வீடியோ இதோ.

0
5092
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.

இதையும் பாருங்க : பிக் பாஸுக்கு பின் ஷிவானி எடுத்த அதிரடி முடிவு – ஆரி தான் காரணமா ? ஏமாற்றத்தில் 4 மணி ரசிகர்கள்.

- Advertisement -

இறுதி வாரம் என்பதால் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் சனம் ஷெட்டி சென்று இருந்தார். சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய போது மக்கள் பலரும் சனம் ஷெட்டி வெளியேறியது நியாயமே இல்லை என்று கருத்து தெரிவித்தனர். சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரி மற்றும் அனிதாவிடம் தான் நெருக்கமாக இருந்து வந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது கூட ஆரி பற்றி தான் பெருமையாக பேசி இருந்தார். அவ்வளவு ஏன் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு சனம் ஷெட்டி சென்ற போது ஆரியிடம் உங்களுக்காக தான் வந்தேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா மற்றும் ஆரியிடம் பேசிய சனம், நான் பல முறை உங்களை காயப்படுத்தி இருப்பேன். அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுங்கள் என்று கூறி ஆரிக்கு முத்தமிட்டார். அதன் பின்னர் பேசிய ஆரி, மறப்போம் மன்னிப்போம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement