எங்க போச்சி உங்க நேர்மை ? MNM-த்தில் இருந்து விலகிய பத்மபிரியா பற்றி சனம் ஷெட்டி போட்ட ட்வீட்.

0
1965
sanam
- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விள்குவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டவர் பத்மப்ரியா.

-விளம்பரம்-

இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார்.ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதையும் பாருங்க : அப்பா விஷயத்தில் நான் ராசி இல்லாதவள் – தனது அப்பாவாக நடித்த ரமேஷ் மரணம் குறித்து ஜாக்லின் உருக்கம்.

- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் நான்காம் இடத்தை பிடித்தது. இப்படி ஒரு நிலையில் பத்மபிரியா நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த அவர், அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

பத்மபிரியா விலகியதை தொடர்ந்து பலரும் அவர் மீது விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான சனம் ஷெட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகைவர்கள் குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். எங்கே போனது உங்கள் நேர்மை ? உங்கள் அனைவருக்கும் என்னுடைய கேள்வி, நீங்கள் ஜெயிச்சு இருந்தாலும் கட்சியிலிருந்து விலகி இருப்பீர்களா ? அனைவருமே கமலஹாசனுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நீங்கள் துரோகம் செய்து இருக்கிறீர்கள் என்று சாடி இருக்கிறார் சனம் ஷெட்டி

Advertisement