நீச்சல் உடையில் சனம் ஷெட்டி நடத்திய போட்டோ ஷூட் – அவங்களா இப்படி ?

0
41830
sanam
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த டிம்பர் 6 ஆம் தேதி சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை.

-விளம்பரம்-

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல்வேறு பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல சனம் ஷெட்டி வனிதாவை போல வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே நடிகை சனம் ஷெட்டி பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் சனம் செட்டி என்பவர் இருக்கிறார் என்பதே கடந்த சீசனில் பங்குபெற்ற தர்ஷன் மூலமாகத்தான் பலருக்கும் தெரிய வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பாகவே தர்ஷன் மற்றும் சனம் இருவரும் காதலித்து வந்தார்கள். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கூட நடைபெற்று இருந்தது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவர் திருமணமும் நின்றது.

- Advertisement -

இதனால் தர்ஷன் மீது போலீசிலும் புகார் அளித்திருந்தார் சனம் ஷெட்டி. மேலும், சனம் ஷெட்டி பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தியதால் தான் இந்த இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி பிகினி உடையில் நடத்திய போட்டோ சூட்டின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சனம் ஷெட்டி எந்த ஒரு பேட்டியிலும் பங்குபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் பிரபல ஆங்கில இதழான Times Of India-விற்கு சனம் ஷெட்டி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் சனம் ஷெட்டியிடன் பிக் பாஸில் கலந்து கொண்டதற்கான காரணம் கேட்கப்பட்டு இருந்தது.

அதற்கு பதில் அளித்த அவர், மக்களுக்கு என்னை ஒரு மாடல் அழகியாக தெரியும் ஆனால் நான் கிட்டத்தட்ட இருபது படங்களில் வெவ்வேறு வழிகளில் நடித்திருக்கிறேன் இருப்பினும் ஒரு நடிகையாக எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை இந்த ஒரு காரணத்திற்காக தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் ஏனென்றால் குறைந்த காலகட்டத்தில் என்னைப் பற்றி உலகம் முழுதும் தெரியவரும் என்று எண்ணினேன். அதை நம்பித்தான் பிக் பாஸுக்கு போனேன். ஆனால், எந்த நேரத்திலும் வெளியேற தயாராக இருந்தேன். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எனக்கு கிடைத்த பிரபலம் எனக்கு திருப்தியை அளித்து இருக்கிறது. எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement