கவின் குறித்து மனமுருகி பேசிய சாண்டி.! இன்று வெளியான ஸ்பெஷல் வீடியோ.!

0
1792
sandy
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சத்தை வாங்கி கொண்டு வெளியேறியுள்ளார் என்ற செய்தி தான் சமூக வலைதளத்தில் தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் கவின் எடுத்த இந்த முடிவு கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் எவ்வளவு கூறியும் அவர்களின் பேச்சைக் கேட்காத கவின், நான் இந்த முடிவை தெளிவாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார். கவின் வெளியேறியதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையும் பாருங்க : கவின் குறித்து ட்வீட் செய்த வனிதா.! அடுத்து வனிதாவின் ஆதரவு இந்த போட்டியாளருக்கு தானாம்.!

- Advertisement -

இன்று வெளியான முதல் பேரோமோவில் கவினை நினைத்து மனம் நொந்து அழுதார் லாஸ்லியா. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் குறித்து கவினின் உயிர் நண்பரான சாண்டி மனமுருகி பேசியுள்ளது அனைவரயும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக நாள் தோறும் மதியம் 12 மணிக்கு தான் இரண்டாவது ப்ரோமோ வெளியாகும். ஆனால், கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றுள்ளதால் இன்று 10.30 மணிக்கே இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இருந்தே கவினுக்கு விஜய் தொலைக்காட்சியும் எந்த அளவிற்கு ஆதரவாக இருக்கிறது என்பது உணர முடிகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement