பிக் பாஸில் இரண்டாம் இடம் பிடித்த சாண்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த குருநாதர்.!

0
22065
Sandy
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கோலாகலமாக நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முதல் பரிசை முகெனும் இரண்டாம் பரிசை சாண்டியும் வென்றார். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அவருக்கு ஆதரவாக சாண்டி நடன பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் பல்வேறு விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாண்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெறித்தனம் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
sandy

இந்த சீசனில் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக தேர்வான சாண்டியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை கொண்டவராக இருந்தார் சாண்டி. பிக்பாஸ் ஆரம்பத்தின் முதலே தனது ஜாலியான குணத்தினால் மற்ற போட்டியாளரிடம் விரைவில் ராசியானார் சாண்டி. அதில் சாண்டிக்கு மிகவும் நெருக்கமானது கவின் தான். இந்த சீசன் ஆரம்பித்த நாள்முதல் கவினுக்கு இவர் பெரிதும் உறுதுணையாக இருந்தார். மேலும் இவரால் பிக்பாஸ் வீட்டில் வி ஆர் த பாய்ஸ் என்ற கேங்கும் துவங்கியது. மேலும், பிக் பாஸ் வீட்டில் பல்வேறு கானா பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக தனது திருமணம் குறித்து பேசிய லாஸ்லியா.!

- Advertisement -

இவரது கானா பாடல்களை கமல் அவர்களை பாராட்டியும் இருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு போட்டியாளரும் செல்லும் முன்னரும் இவர் பாடும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டது. இதுவரை பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை என்றாலும் ஒருகட்டத்தில் இவருக்கும் மதுமிதாவிற்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது தனது ஜாலி தன்மையிலிருந்து கொஞ்சம் சீரியஸ் மோடிற்க்கு வந்தார் சாண்டி. இருப்பினும் மதுமிதா எவ்வளவு தரைகுறைவாக பேசியும் அடுத்த சில நிமிடங்களிலேயே அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டார் சாண்டி, அதுதான் அவரது சிறந்த குணமாக கூட கருதப்படுகிறது. யாரிடமும் அவ்வளவாக குரலை உயர்த்தி பேசுவதில்லை மிகவும் நெருக்கமாக பழகி வந்த கவின் லாஸ்லியாவிற்காக சாண்டியை பலமுறை காயப்படுத்திய போதும் தானாக சென்று அவரிடம் பேசி இருந்தார் சாண்டி இவர் நட்பிற்கு கொடுக்கும் மரியாதையை கமல் கூட பாராட்டி இருந்தார்.

சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை பிக் பாஸ்ஸின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்தார். எப்போதும் பிக் பாஸ்ஸை குருநாதர் என்று மிகவும் செல்லமாக அழைத்து வந்தார் சாண்டி. அதே போல பிக் பாஸ்சும் சாண்டியை சிஷ்யா என்று செல்லமாக அழைத்து வந்தார். இதுவரை பிக் பாஸ் யாரையும் செல்ல பெயரை வைத்து அழைத்ததே இல்லை. பிக் பாஸ்ஸில் குருநாதா என்று அழைத்து வந்தாலும் நிஜ வாழக்கையில் இவர் உண்மையான குருவாக பாவித்து வருவது பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர் தான்.

-விளம்பரம்-

சாண்டி, விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியதர்க்கு முன்னர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார். அதே போல கலா மாஸ்டரும் சண்டியை ஒரு நல்ல சிஷ்யனாக பாவித்து வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசை வென்ற சாண்டியை, கலா மாஸ்டர் நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement