நான் எப்படி பன்றேன் வந்து பாருங்க வாங்க.! சேரனிடம் முகம் சுழிக்கும் வகையில் பேசிய சாண்டி.!

0
2743
Cheran-sandy
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் நேற்று ஒரு டாஸ் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கிங் போட்டியாளர்களுக்கு ஒரு தங்க முட்டை ஒன்று வழங்கப்பட்டது. அந்த தங்க முட்டை கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்க முட்டையை யாரும் உடைக்காமல் போட்டியாளர்கள் கண்காணிக்க வேண்டும். அதே போல மற்ற போட்டியாளர்களின் தங்க முட்டைகளை அவருக்கே தெரியாமல் உடைக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கின் போது தங்களது முட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் மற்ற போட்டியாளர்கள் யாரும் கழிவறைக்கு கூட செல்லாமல் அமர்ந்து கொண்டிருந்தனர். ஆனால், நடுஇரவில் சாண்டி மட்டும் கழிவறைக்கு சென்றிருந்தார். அப்போது தனது முட்டையை கண்காணிக்கவேண்டும் என்று கழிவறை கதவை கூட மூடாமல் வெளியில் இருந்தபடி சிறுநீர் கழித்தார். அதை பார்த்த ஷெரின் முகம் சுளித்த போது சேரனிடம் பார்க்கவே மிகவும் அசிங்கமாக இருக்கிறது சுவரெல்லாம் ஆகிவிடாதா என்று கூறியிருந்தார். அதன் பின்னரும் அதிகாலையில் சாண்டி கழிவறைக்கு செல்ல போவதாக கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : சொந்தமாக மாதம் இதற்காக மட்டும் 75 ஆயிரம் செலவு செய்கிறாராம் மாறன் .! பிரசாந்த் சொன்ன சீக்ரெட்.!

- Advertisement -

அப்போது சேரன் மீண்டும் அதே போல தான் போகப் போகிறீர்களா, உதை வாங்க போறீங்க எல்லாரும் போகாமல் இங்கே தானே அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் மட்டும் போனால் நியாயமா என்று கேட்டதற்கு ,இது என்னுடைய தந்திரம் என்று சாண்டி கூறினார். நீங்கள் செய்வது அசிங்கமாக இருக்கிறது நின்றுகொண்டு அடிப்பது எல்லாம் பார்க்க நன்றாக இருக்கிறது சுவரெலாம் ஆகிவிடாதா என்று சேரன் கேட்டதும், நான் சுவற்றில் அடித்ததை நீங்கள் பார்த்தீர்களா, என் கூட வாங்க நான் எப்படி அடிக்கிறேன் என்று பாருங்கள் . நானாவது பரவா இல்ல ஒரு சில நிகழ்ச்சியில் பேண்ட்லயே போய்டுவாங்க நானாவது டாய்லட்ல போறேன் என்று மிகவும் முகம் சுளிக்கும் வகையில் பேசியிருந்தார். சாண்டி இதனை பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது.

இந்த பிக் பாஸ் சீசன் ஆரம்பித்த நாள் முதலே சேரனுக்கும்சாண்டிக்கும் ஒருவிதமான தனிப்பட்ட மறைமுகமான மோதல் இருந்துதான் வந்தது. அதற்கு முக்கிய காரணமே சேரனின் மகளான தாமினி காதல் திருமணம் செய்து கொண்டபோது ஏற்பட்ட பிரச்சனை தான் என்றும் கூறப்பட்டது. சேரன் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட சந்துரு, சாண்டியின் நண்பர் என்றும், சேரன் மகளின் காதல் திருமணத்திற்கு சாண்டியும் உதவி செய்தார் என்றும், இதனால் தான் சேரன் மற்றும் சாண்டிக்கு முட்டிக்கொண்டு வருகிறதுஎன்றும் ஏற்கனவே ஒரு செய்தி வைரலாக பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement