அப்பா ஸ்தானத்தை அசிங்கபடுத்தறாங்க.! நடிக்கிறாங்க.! கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்.!

0
7032
Bigg-Boss
- Advertisement -

-விளம்பரம்-

பிக் பாஸின் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்குமே விருது என்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை சாக்ஸி மோகன் வைத்தியா அபிராமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வழங்கினர் மேலும் இவர்கள் மூவரும் கலந்தாலோசித்து யாருக்கு என்ன விருது வழங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

- Advertisement -

இதில் முதல் விருதே லாஸ்லியாவிற்கு தான் வழங்கப்பட்டது, அவருக்கு பச்சோந்தி என்ற விருது வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொள்ள மேடைக்கு வந்த லாஸ்லியா அதனை கையில் வாங்கிக்கொண்டு இந்த விருதினை நான் வாங்க விருப்பம் இல்லை என்று சாக்ஸியின் காலடியில் தூக்கிப் போட்டு விட்டு வந்து விட்டார். இதனால் நடுவர்களாக இருந்த மூவருமே கடும் கோபம் அடைந்தார் இதனால் லாஸ்லியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் பாருங்க : நான் விலகி கொள்கிறேன்.! கண்ணீர் விட்டு வீடியோவில் கதறிய காதலி.! வனிதாவால் பிரிந்தது தர்ஷன் காதல்.!

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரும் பிரபல கவிஞ்சருமான சினேகன், நேற்றய நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்துள்ளர். அதில், தங்கை ஒவியா, சுஜா, ரைஸா, பிந்து போன்ற போட்டித் தன்மையுடன், மரியாதை தெரிந்த பெண்கள் கலந்துக்கொண்ட சீசன் அது. இப்போது, அனைத்துமே தலைகீழாக மாறி உள்ளது. நேயர்கள் மத்தியிலும் சுவாரசியம் கம்மியாக என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மற்றுமொரு டீவீட்டில், பிக் பாஸில் நாங்கள் இருக்கும் போது, கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் மரியாதை குறைவாக யாரும் நடக்கவில்லை. அண்ணன் வையாபுரியை அனைவரும் அப்பா ஸ்தானத்தை கொடுத்து மதித்தனர், நடிக்கவில்லை இங்கு ஒரு சிலரை போல். உறவுகளையே அசிங்கப்படுத்துகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார் சினேகன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement