தாலியை திருடிட்டாங்க, பிக் பாஸ் விட்டில் இருக்கும் சினேகனை நினைத்து வருந்தும் கன்னிகா

0
639
snehan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இவர் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது. சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் சினேகன் நடித்து இருந்தார். தற்போது சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். நிகழ்ச்சியில் சினேகன் நன்றாக கேம் விளையாடி வந்தாலும், திடீரென்று தன்னுடைய மனைவி கன்னிகாவை நினைத்து வருத்தப்படுவது பார்ப்பவர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

- Advertisement -

சினேகன்- கன்னிகா திருமணம்:

இது குறித்து கூட கடந்த வாரம் சிம்பு, சினேகன் நல்லா கேம் விளையாடுறீங்க, திடீரென்று காணாமல் போயிடிறீங்க, என்ன காரணம்? அவங்கள நினைச்சி வருத்தப்படுறீங்களா? என்று கேட்டிருந்தார். அதற்கு சினேகன் ஆமாம், மனைவியை நினைத்து தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர்கள் இருவருக்கும் பத்து வருடம் வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து வருகிறார்கள். அதோடு இவர்களுடைய திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து இருந்தது.

கன்னிகாவின் யூடியூப் சேனல்:

ஆனாலும், அதையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு தங்களுடைய வாழ்க்கையை இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் அவர் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படம், வீடியோ என்று அனைத்தையும் பகிர்ந்து வருவார். சினேகன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகும் கூட அவரை நினைத்து காதல் கவிதைகளை எழுதி கன்னிகா பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் கன்னிகா, ரசிகர்கள் உடன் உரையாடல் ஒன்றை நடத்தி இருந்தார்.

-விளம்பரம்-

தன் காதல் குறித்து கன்னிகா கூறியது:

அதில் அவர் தன்னுடைய தாலி திருட்டுப் போன விஷயத்தை கூறியிருந்தார். அது என்னவென்றால், முதன் முறையாக சினேகன் இடம் கன்னிகா காதலை சொன்ன விதத்தை பல போட்டிகளில் கூறி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. முதன் முதலாக காதலைச் சொன்னது சினேகன் என்றாலும் அதற்கு பதில் சொல்ல கன்னிகா 5 மதம் எடுத்துக்கொண்டார். அதேபோல் கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த தீப ஒளியில் தான் தன்னுடைய காதலை கன்னிகா சொல்லி இருக்கிறார்.

தாலி திருட்டு போய் விட்டது:

அப்போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் போய் புரபோஸ் செய்திருக்கிறார். அந்த தாலியை கையில் வைத்து சினேகன் போட்டோவும் எடுத்துக் கொண்டிருக்கிறார். மிகவும் சென்டிமென்டாக இருவரும் அதை பத்திரமாக வைத்து இருந்தார்கள். ஆனால், ஒருநாள் அந்த தாலி திருட்டு போய்விட்டது. அதை தாங்கிக்கொள்ள முடியாமல் கன்னிகா அழுது கொண்டே இருந்திருக்கிறார். இதை தான் கன்னிகா ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement