மூன்று மாதத்தை நிறைவு செய்த மகன். பிறந்து 15 நாளில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்ட சுஜா.

0
60074
suja-varunee
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று இருந்தது. ஆனால், ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் முதல் பரிசினை ஆரவ்வும் இரண்டாம் பரிசினை கவிஞர் சினேகனும் தட்டி சென்றார்கள். இந்த சீசனில் பெண் போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான அவர்களில் ஒருவராக இருந்து வந்தார் நடிகை சுஜா வருணி.

-விளம்பரம்-
View image on Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இவர் பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும் ஒரு சில படங்களில் ஐட்டம் டான்ஸர் ஆகவும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்தி தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த அமலி துமலிகளை ரசிகர்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட வனிதாவை போல இவரும் பிக் பாஸ் முதல் சீசனில் ஒரு சவுண்ட் பார்ட்டியாக இருந்து வந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நடிகை மீனா வீட்டை வாங்கிய சூரி. எத்தனை கோடி கொடுத்து வாங்கியுள்ளார் தெரியுமா ?

 கடந்த ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்ட சுஜா வருனி. அதற்கு முக்கிய காரணமே திருமணமான சில மாதங்களிலேயே சுஜா வாருணி கருவுற்று இருந்தார். மேலும், இவரது சீமந்த புகைப்படங்களை கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுஜா வருணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த அவரது கணவர் என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான் என்றுகுறிப்பிட்டிருந்தார்.

சுஜா மற்றும் சிவகுமார் தம்பதியினர் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி தங்களது முதல் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனால் முதல் முறையாக தனது குழந்தையுடன் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை முதன் முறையாக பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நேற்று (நவம்பர் 21) தனது குழந்தை மூன்று மதங்களை நிறைவு செய்திருப்பதை ஒட்டி சுஜா வருனி, தனது குழந்தையின் 15 நாட்களின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement