அட கடவுளே, புது வருடத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா ?

0
536
biggboss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 89 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் வென்றால் நாமினேஷனில் இருந்து தப்பித்துவிடலாம் என்று ஒரு சிலரை தவிர மற்ற போட்டியாளர் மும்மரமாக போட்டியிட்டனர்.

-விளம்பரம்-
sanjeev

இந்த டாஸ்கில் எப்படியாவது வென்றுவிடலாம் என்று மிகுந்த கனவோடு இருந்த நிரூப் முதல் நாளே வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. நிரூப் வெளியேறியதை தொடர்ந்து இரண்டாம் டாஸ்க்கிலேயே பாவனியும் தாமரையும் வெளியேறினார். இவரை தொடர்ந்து நடைபெற்ற டாஸ்கில் ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய 5 பேர் மட்டும் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கை விளையாடினர்.

- Advertisement -

இறுதி போட்டிக்கு சென்ற அமீர் :

இதில் பிரியங்கா மற்றும் ராஜு வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற இறுதி டாஸ்கில் சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூவர் மட்டும் விளையாடினர். இதில் சஞ்சீவ் வெளியேற சிபி மற்றும் அமீர் இறுதி கட்டத்திற்கு முன்னேறினர். இதில் வெற்றி பெரும் ஒருவர் Ticket To Finale வாய்ப்பை வென்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள் என்று இருந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அமீர் வென்றார்.

Ticket To Finale வென்ற முதல் வைல்டு கார்ட் :

Ticket To Finale டாஸ்கில் அமீர் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு சென்று இருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல பிக் பாஸ் வரலாற்றிலேயே Ticket To Finale டாஸ்கை வென்ற முதல் வைல்டு கார்ட் போட்டியாளர் அமீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சஞ்சீவ் வெளியேற என்ன காரணம் :

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் வெளியேறியது யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது வேறு யாரும் இல்லை சஞ்சீவ் தான். வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சஞ்சீவ், பாய்ண்ட் பாயிண்டாக பேசினாலும் நல்ல பெயர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் Safe கேம் தான் விளையாடி கொண்டு வந்தார். அதுவே இவரது வெளியேற்றத்திற்கு காரணம்.

ஆரம்பம் முதலே குறைவான வாக்குகள் :

மேலும், இந்த வாரம் அமீர் வெளியேறி இருக்க வாய்ப்பு இருந்தது ஆனால் பல்வேறு தனியார் வலைதளத்தில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் கூட ஆரம்பம் முதலே சஞ்சீவ் தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், புது வருடத்தில் சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது மிகவும் சோகம் தான்.

Advertisement