இதுக்கு தான் அப்பா அவங்கள சொன்னாரு – இசைவாணி குறித்து அண்ணாச்சியின் மகள் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
1172
annachi
- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது தாறுமாறாக போய்க்கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களை விட இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். அதிலும் இந்த முறை முகம் தெரியாத நபர்களுக்கு தான் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். வழக்கம் போல் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சர்ச்சைகள் தொடங்கியது. அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பஞ்ச பூதம் டாஸ்க்கில் நாணயம் கொடுக்கப்பட்டது. பின் இந்த வாரம் கிராமமா? நகரமா? என்ற டாஸ்க் கொடுத்து போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-6.jpg

இதனால் சில போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடும், மனக்கசப்பும் ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் இமான் அண்ணாச்சிக்கும், இசைக்கும் இடையே நடந்த தகராறு அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், நெருப்பு சக்தி ஆற்றலை வைத்திருந்த இசைவாணி பிக்பாஸ் வீட்டில் முழுவதும் அதிகாரம் செய்யலாம் என்று சொல்லி இருந்தார்கள். இதனால் இசைவாணி தன்னுடைய வேலையை செய்து வந்தார். ஆனால், இமான் அண்ணாச்சி ‘நீ சர்வாதிகாரம்’ செய்கிறாய் என்று அவரிடம் வாக்குவாதம் செய்து இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து கமல் சார் கூட பேசி இருந்தார். இந்த நிலையில் இமான் அண்ணாச்சியின் மகள் ஜெஃபி ஷைனி இது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதையும் பாருங்க :அடுத்த பைக் ரேசர் ரெடி’ – தன் ஹெல்மெட்டை மகனுக்கு போட்டு போஸ் கொடுத்ததற்க்கே இந்திய அளவில் ட்ரெண்ட்டான குட்டி தல.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, என் அப்பா எப்பவுமே கோபப்பட மாட்டார். ரொம்ப கூலா எல்லாரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். அதே கேரக்டர் அங்க போயும் மாறவில்லை. வீட்டில் எப்படி எங்களுடன் இருப்பாரோ அப்படித்தான் அங்கேயும் அப்பா இருக்கிறார். ஆனால், பலரும் அவரை தப்பா பேசுறதா சொல்கிறார்கள். அது அவர்களுடைய நல்லதுக்கு தான் சொல்கிறார்கள் என்று யாருமே புரிந்து கொள்ளவில்லை. அப்பா எப்பவுமே மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக மூஞ்சிக்கு நேராக சொல்லிவிடுவார்.

பின்னாடி பேசுவதெல்லாம் பிடிக்காது. மேலும், நடந்த டாஸ்க்கில் இசைவாணி அக்காகிட்ட அப்பா நல்லதுக்காகத் தான் ஒரு விஷயம் சொன்னார். ஆனால், அதை அவர்கள் தப்பாக புரிந்து கொண்டார்கள். அதனால் தான் அவர்களுக்குள் நிறைய தடவை முரண்பாடு ஏற்பட்டது. அதே மாதிரி ராஜு அண்ணாவும் அப்பாவைப்போல் மற்றவர்களை சிரிக்க வைப்பதால் ராஜு அண்ணாவுக்கும், அப்பாவுக்கும் இடையே ஒரு நல்ல உறவு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுடைய உறவு கடைசி வரையும் நீடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement