அபிஷேக்கை தொடர்ந்து மற்றொரு வைல்டு கார்டு – பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள புதிய போட்டியாளர். யார் இது ?

0
351
biggboss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் வார வாரம் எலிமினேஷனில் போட்டியாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் நதியா சாங் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி ஆகியோர் வெளியேறுகிறார்கள். இதுவரை மொத்தம் 18 போட்டியாளர்களில் 7 பேர் வெளியேறி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : இதனால் தான் அருவி படத்திற்கு பின் நடிக்கவே இல்லை – அதிதி பாலன் சொன்ன தகவல்.

- Advertisement -

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்று அல்லது இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த மூன்றாம் சீசனில் கூட வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு மூலம் கொண்டு வந்தனர். அதே போல இந்த சீசனில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டவுடன் வெளியேறிய அபிஷேக்கை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அபிஷேக் வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் அடுத்த வைல்டு கார்டு போட்டியாளர் நுழைந்து இருக்கிறார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அவரும் போட்டியாளர்களை போல டாஸ்க் காஸ்ட்டுயூமை அணிந்து இருக்கிறார். ஆனால், அவர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Advertisement