எவனையும் ஏமாத்தி சம்பாதிக்கல – அனைவரும் எதிர்பார்த்த ஆஸ்கர் நாயகன் அபிஷேக்கின் ஸ்டோரி.

0
4256
abhishek
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3ஆம் தேதி துவங்கியது. முதல் ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் ஜாலியாக தான்இருந்து வந்தனர். அதேபோல வீட்டில் பெரிதாக சண்டையோ சர்ச்சையை எழவில்லை. இடையில் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவருக்கு மட்டும் லேசாக சண்டை எழுந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதுவும் சமாதானத்தில் முடிந்துவிட்டது.

-விளம்பரம்-

முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக திருநங்கையான நமிதா மாரிமுத்து பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை நமிதா மாரிமுத்து சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறிவிட்டதாக அறிவித்தனர்.

இதையும் பாருங்க : சட்டையை விளக்கி 5000 ரூபாய் உள்ளாடை தெரியும் வகையில் போஸ் – பாவனியா இது ?

- Advertisement -

கடந்த வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமிநேஷனில் இந்த வார தலைவர் தாமரை மற்றும் பாவனியை தவிர 15 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்ப்பு நிலவி வருகிறது.

நேற்றய நிகழ்ச்சியில் மீண்டும் கடந்து வந்த டாஸ்க் தொடர்ந்தது. இதில் அக்ஷரா ரெட்டி மற்றும் பிரியங்கா தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி கூறி இருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த அபிஷேக் ராஜா, தான் கடந்து வந்த பாதை குறித்து பேச ஆரம்பித்து உள்ளார். அதிலும் நான் எவனையும் ஏமாத்தி சம்பாதிக்கல என்று படு எமோஷனாக பேசி இருக்கிறார் அபிஷேக்.

-விளம்பரம்-
Advertisement