டாஸ்கில் வென்ற 5 பேருக்கு பிக் பாஸ் கொடுத்த செம சலுகை – சிபியின் தலைவர் பதவிக்கும் ஆப்பு.

0
1798
bb
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த முறை பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களை களம் இறங்கி இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் இந்த முறை அதிகம். குறிப்பாக தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். ஆனால், சில நாட்களிலேயே அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியது அனைவருக்குமே தெரிந்தது.

-விளம்பரம்-

வழக்கம் போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கியது. மேலும், கடந்த வாரம் முதல் எழிமினேஷனில் நதியா சாங்க் வெளியேறினர். இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான பஞ்சபூதம் டாஸ்க் தொடங்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொரும் தங்களால் இயன்றவரை விளையாடி வருகிறார்கள். இதில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐந்து நாணயங்கள் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அந்த நாணயங்களை யார் வைத்துள்ளார்களோ? அவர்களுக்கு ஒரு சலுகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த நாணயத்தை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் பிரிக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் போட்டியாளர்கள் இருக்க வேண்டும். அந்த இடத்திற்கு வேறு ஒரு நபர் வந்தால் அந்த நாணயம் வைத்திருப்பவர் சொல்லும் டாஸ்கை செய்துவிட்டு தான் வரவேண்டும் என்று நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் கூடியிருந்தார். இதில் இந்த நாணயத்தை நீருப், வருன், தாமரைச்செல்வி, இசைவாணி, பாவணி எடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் இன்றைக்கான பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் அவர்கள் நாணயம் வைத்திருக்கும் நபர்கள் தங்களையோ, தான் விரும்பும் நபரையோ காப்பாற்றலாம். அதே போல் தலைவர் போட்டியில் தேர்வான நபரின் பதவியை நாணயம் வைத்திருக்கும் நபர் பறித்து தனக்கு வேண்டிய ஒரு நபரையோ அல்லது தன்னையோ வீட்டின் தலைவராக நியமிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதைச் சொன்னவுடன் அபிஷேக் வழக்கம்போல் தன்னுடைய வேலையை காண்பித்து வருகிறார். யார் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? யார் காப்பாற்றப் படுகிறார்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement