விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்கியது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் 18 போட்டியாளர்களுடன், பல மாற்றங்களுடன் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இந்த சீசனில் தான் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புது முக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர். இவர் மேடை நாடக கலைஞர். மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதோடு பிக் பாஸின் இந்த வார தலைவராக தாமரை செல்வி தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கூறியிருந்தார். வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்துவிட்டுள்ளனர். அதன் பின்னர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்கள். அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை. பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார்.அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே தாமரை செல்வி வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் இவர் தனது பிள்ளைகளுக்காக தான் நாடகத்தில் நடித்து வருகிறார் என்று கூறி இருந்தார்.
இதையும் பாருங்க : ஒரு கணவர்னா இப்படி இருக்கனும் – பிரியங்காவே பொறாமை பட்ட நாதியாவின் கணவர் இவர் தானா.
மேலும், தாமரை செல்வி தான் காதலித்து திருமணம் செய்ததாகவும் அவருடைய மாமியார் தன்னை மகள் போல் பார்த்து கொள்ளுவதாகவும் பேசியிருந்தார். இப்படி தாமரை செல்வி பேசிய விஷயங்கள் பார்ப்போரின் கண்களில் கண்ணீர் மல்க விட்டது. தாமரையின் கணவர் ஜவுளிக்கடையில் வேலை செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாமரை செல்வி பேசியதை பார்த்துவிட்டு தாமரையின் கணவரும் அவரின் மாமியாரும் இடம் பேட்டி எடுத்து இருந்தார்கள். அதில் அவர்கள் கூறியது, ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இவர்கள் வெளியே போய் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பிறகு நான் ஏற்றுக்கொண்டேன். தாமரை ரொம்ப நல்ல பிள்ளை ரொம்ப தங்கமான பொண்ணு என்று அப்புறம் தான் எனக்கு தெரிந்தது.
எனக்கு ஏதாவது என்றால் அவள் துடித்துப் போய்விடுவாள். அவளை நான் மகள் மாதிரி தான் பார்க்கிறேன். அவள் அம்மா வீட்டுக்கோ, நாடகத்திற்கோ சென்றால் திரும்பி வரும் வரை என் மனது ஏங்கிக்கொண்டே இருக்கும். அவள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று இருப்பது குறித்து எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்று தாமரையின் மாமியார் உணர்ச்சி வசமாக பேசியிருந்தார். தாமரையின் கணவரும் தங்கள் காதல் திருமணம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் சில உணர்வு பூர்வமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். பின் கண்டிப்பாக தாமரைச்செல்வி வெற்றி பெற்று வருவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தாமரைச்செல்வியின்கணவரும் மாமியாரும் கூறியிருந்தார்கள். தற்போது இவர்கள் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.